சி. என். அண்ணாத்துரை
23
கள் பாமர மக்கள் மனதிலும் தோன்ற நாட்டில்
எங்கும் அறிவுப் பிரசாரம் செய்யப்படவேண்டும்.
பண்டைய நம் பண்புகள் பற்றி ஏட்டிலே உள்ளவை
களை நாட்டிலே உள்ள மக்களுக்கு எடுத்துச்
சொல்லவேண்டும்.
இப்பொழுது உங்களுக்கு மாத்திரமல்ல பரிட்சை நடக்கப்போகிறது; தமிழகத்திற்கும் தற்காலம் பரிட்சை நேரம். நீங்கள் படிக்கிறீர்கள் உங்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள். நீங்கள் பரிட்சையில் தேறிவிடலாம். ஆனால் தமிழ்நாடு பரிட்சையில் தேற வேண்டுமே! பரிட்சைக்குப் போகும் தமிழ்நாட்டிற்கு யார் பாடம் சொல்லிக்கொடுப்பது? தமிழ் நாட்டிற்குப் போதனை செய்வதற்கு மாணவர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? உங்களைக் கேட்கிறேன்; ஆசிரியர்களைக் கேட்கிறேன்; என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்; நீதியைக் கேட்கிறேன்; அறிவைக் கேட்கிறேன்; வெட்டவெளியில் நின்று ஆகாயத்தைப் பார்த்துக் கேட்கிறேன்? எதிரொலியாவது பதில் தரட்டும். மாணவர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் தகுதியானவர்கள்.
“யவன நாட்டுக் கலங்கள் தமிழ் நாட்டுக் கடற் கரையை முத்தமிட்டன. தமிழ் நாட்டு முத்துக்களை, இத்தாலிய நாட்டு எழிலரசிகள் தங்கங்களைக் கொடுத்து வாங்கினார்கள்; தமிழ் நாட்டு மன்னன் ஒருவன் ஈழநாடு சென்று வெற்றி பெற்றான்; இமயத்தில் சேர சோழ பாண்டியர்களது இலச்சினைகள் பொறிக்கப்பட்டது; தமிழர்களை எதிர்ப்பவர்-