பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

'செயக் கடவ அல்லனவும் செய்தும்மன்' என்பார்
நயத்தகு நாகரிகம் என் ஆம்?—செயிர்த்து உரைப்பின்,
நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண் அளிபோல்,
எஞ்சாது எடுத்து உரைக்கற்பாற்று.70

அல்லன செய்யினும், ஆகுலம் கூழாக் கொண்டு,
ஒல்லாதார் வாய் விட்டு உவம்புப; வல்லார்
பிறர் பிறர் செய்பபோல் செய்தக்க செய்து ஆங்கு
அறிமடம் பூண்டு நிற்பார்.71

பகை இன்று,பள்ளார் பழி எடுத்து ஓதி,
நகை ஒன்றே நன் பயணக் கொள்வான். பயம் இன்று.
மெய் விதிர்ப்புக் காண்பான். கொடிறு உடைத்துக் கொல்வான்போல்,
கை விதிர்த்து அஞ்சப்படும்.72

தெய்வம் உளது என்பார் தீய செயப் புகின்,
தெய்வமே கண் இன்று நின்று ஒறுக்கும்; தெய்வம்
இலது என்பார்க்கு இல்லை:—தம் இன் புதல்வர்க்கு அன்றே,
பல காலும் சொல்லார் பயன்?73

தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும்,
தீயன தீயனவே, வேறு அல்ல; தீயான
நல்லன ஆகாவாம்—நா இன்புற நக்கி,
கொல்லும் கவயமாப்போல்.74

நன் மக்கள் செந் நாத் தழும்பு இருக்க, நாள்வாயும்
செந் நெறிச் செல்வாரின் கீழ் அல்லர்—முன்னைத் தம்
ஊழ் வலி உன்னி, பழி நாணி, உள் உடைவார்,
தீய செயினும் சில.75

பிறன் வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன் அன்றே: ஆயினும் ஆக; சிறு வரையும்
நல் நலத்தது ஆயினும் கொள்க! நலம் அன்றே;
மெய்ந் நடுங்க உள் நடுங்கு நோய்!76

கருமம் சிதையாமே, கல்வி கெடாமே,
தருமமும் தாழ்வு படாமே, பெரிதும் தம்
இல் நலமும் குன்றாமே, ஏர் இளங் கொம்பு அன்னார்
நல் நலம் துய்த்தல் நலம்.77