பக்கம்:நூறாசிரியம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

நூறாசிரியம்


51 எழுந்தனர் இவரே!


தும்பை சூடிலர் இடைவாள் செருகிலர்:
வெண்கலை உடுத்திலர், கொல்வேல் ஏந்திலர்;
தடமுர சார்த்திலர் இடம்பொழு தமைத்திலர்!
வடம்பிணிப் பறுத்த மதக்களி றன்ன
தடம்பட நடந்த கால்கழல் பூண்டிலர்!5


வேத்தவை நுழைந்திலர் யாத்தநூல் அறிகிலர்!
பூத்த இளமுகத் தொளியுமிழ் கண்ணும்
முத்த வெய்துளி துதலுஞ் சிவப்பக்
கொள்கை பொறித்த கொடிதோள் தாங்கி
வெல்கை யொன்றே வேண்டுவோராகி 10
வானம் அதிரச் சூழ்ந்துகோள் ஆர்த்து
மானங் காத்திட எழுந்தனர் இவரே!


புன்றலை முதிரா யாக்கையி னோரே!
முகமயிர் அரும்பா இளவயி னோரே!
பால்முகம் மாறாப் பசுமையோ ராகி 15
நூல்முகம் புகூஉம் பள்ளி யோரே!


செம்புது வெள்ளம் ஒப்போ ராகித்
தம்புதுக் கொள்கை தெருத்தொறும் முழக்கி
வைகறை தொடங்கிக் கதிரொடு நடந்தே
யாமமுந் துயிலாத் தறுக னோரே! 20
மண்ணும் வேண்டிச் சூழ்ந்தனர் இலையே!
பொன்னும் விழைந்தனர் இலையே! பொருதும்
நோக்கும் அரும்பிலர், நுண்கலை பயின்றிலர்;
கருவியுங் கொண்டிலர் போர்முகம் கண்டிலர்:
சுவடியும் கோலுந் தூக்குவ தன்றிக் 25
கவடும் படையும் தாமறி கல்லார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/256&oldid=1209142" இலிருந்து மீள்விக்கப்பட்டது