பாவலரேறு பெருஞ்சித்திரனார்
345
அடைவாய் வாய் அடை என மாறிக்கூட்டி வாயின்கட் பொருந்திய எனப் பொருள் கொள்ளப்பட்டது.
எஃகம் இரும்பினான் ஆகிய கடிவாளம். வலி இழுத்தல்.
கடை புடைப்பினும் நடைமாறாதாய் - கடைவாய் வீங்கப் பெறினும் செலவு மாறாதோய்!
கடை கடைவாய், புடைத்தல்- வீங்குதல் நடை செலவு 'கதி’.
மாறாதாய்- மாற்றமில்லாதோய் குதிரையை முன்னிலைப்படுத்தி இவ்வாறு கூறினான்.
ஈண்டு கடுகல் - இவ்வாறு விரைந்து செல்வதற்குக் கரணியம் என்னை?
மேல், 'நினைதியோ’ என்பது நோக்கி ஈண்டு என்னை என்பது வருவித்துரைக்கப்பட்டது.
குவித்த அறுகொடு - குவித்த அறுகம்புல்லொடும்.
குவித்த என்றமையால் புல்லின் மிகுதி கூறப்பட்டது.
மென்புகை மணக்க அவியல் காணம் - மெல்லிய ஆவியின் மணங் கமழ வேகவைக்கப்பட்ட கொள்ளு.
புகை என்றது புகைபோலும் ஆவியை காணம் கொள்ளுப் பயறு.
நினைதியோ - நீ நினைக்கின்றனையோ, நீ - என்பது தோன்றா எழுவாய்.
கடிவாளத்தை இழுத்துப்பிடிப்பினும் நடைமாறாமல் விரைவதற்குக் கரணியம் இந்நினைவுதானோ என்றனன்.
திதலைப் பொன்பொறி சுருக்கத்து ஒடுங்கும் -தேமலாகிய பொன்னிறமான புள்ளிகள், வயிற்றுச் சுருக்கத்தின் கண்மறைகின்ற.
திதலை-தேமல், பொன்பொறி. பொன்னிறப் புள்ளி,
சுருக்கம் தோற் சுருக்கம் தோலின் மடிப்பு.
புதவல் பயந்த -ஆண்மகவை ஈன்ற
புனிறு இள வயிறோள் - ஈன்றணிமையுடைய மென்மையான வயிற்றையுடையவள்.
புனிறு- ஈன்றணிமை அது பதினாறுநாள் வரை என்பது உலக வழக்கு மகப் பெற்ற மகளிர்க்குப் பதினாறு நாள் காறும் உடல் வலிமை