பக்கம்:நூறாசிரியம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

385


பாலையைப் பரவை என்றமையால் அதைக் கடத்தற்கு நடத்தலை நீந்தல் என்றார்.

அகல் அடி உயர் நெடும் கழுத்து ஒட்டை - அகன்ற அடிகளையும், உயர்ந்த நெடுமையான கழுத்தையும் உடையதான ஒட்டகத்தின்

பாலையைக் கடத்தற்குரிய ஒட்டகத்தின் உடலமைப்பைக் கூறுவாராய் அதன் காலமைப்பை நோக்கி அகல் அடி என்றார். புல் பூண்டுகளற்ற விடத்து ஓங்கி நிற்கும் நிலைத்திணைகளில் உணவு கொள்ளுதற்கு ஏற்பவும் பாறைவிடர்களில் தேங்கி நிற்கும் நீரைப் பருகுதற்கு ஏற்பவும் அது நெடுங்கழுத்து உடையதாயிருத்தலின் அதனையுங் கூறினார்.

ஏந்துபு புறம் உடைத்து இன்புனல் அருந்தும் - எடுத்து நின்ற புறமுதுகின் குமிழை உடைத்து, அதனுள் காக்கப்பட்ட இனிமையான நீரை அருந்தும் பண்பினராகிய

நீரற்ற நெடுவெளியில் செல்லுங்கால் பயன்கொள்ளும் பொருட்டு ஒட்டகம் தன் முதுகிலுள்ள திமிலின்கண் நீரைத் தேக்கி வைத்திருத்தலின், தங்கொனா வேட்கையுள்ளவிடத்து ஒட்டகத்தின் மேல் ஊர்ந்து செல்வோர் அத் திமிலை உடைத்து அதனுள்ளிருக்கும் நீரைப் பருகும் இயல்பினரான,

திமில் குமிழ்போல் இருத்தலின் குமிழ் எனப்பட்டது. திமிலின்கண் இருக்கும் நீர் அதனைப் பருகுவார் உயிரைக் காத்தலின் அது இன்புனல் எனப்பட்டது.

பாலை வாணனும் - பாலை நாட்டார் இனத்தானும்

வாணன்- வாழ்நன்.

பனிமலைவதியனும் - பனி தோய்ந்து கிடக்கும் மலைகளில் வாழும் இனத்தானும்

மக்கள் பதிந்து வாழுமிடம் பதி எனப்பட்டு, அப்பதி வதியெனத் திரிந்து, வாழ்தல் வதிதல் எனப்பட்டது. வாழ்வோன் வதியன் எனப்பட்டான். வதிதல் வசித்தல் என வேறு சென்று, வசிப்போன் வாசியாயினன்.

நீலலைக்குமளிநெடுங்கரைமுகிழ்த்த-நீலஅலை தவழும் குமரி முனையின் நெடுமையான கடற்கரையில் வதியும்

நீலஅலை என்றது. கடலலை என்றற்கு.

முதுகுத் தமிழனும்- தொல் குடித் தமிழனும்

முதுகுடியாவது படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருங்குடி’ என்றாங்குத் தொன்மை மிக்க குடி

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/411&oldid=1211234" இலிருந்து மீள்விக்கப்பட்டது