இவ்வாறு பலவகைகளில் சமய உண்மைகளை விளக்குவதோடு விவிைடை வகையிலும் தம் சமய உண்மைகளைப் பலர் விளக்கியுள்ளனர். எளிய நடையில் தம் சமயம் பற்றிய கேள்விகளை எழுப்பி, அவைகளுக்குத் தாமே விடை யிறுக்கு முகத்தான் தம் சமய நெறியைப் பாமரமக்களுக்குப் பரப்பிய சமயத் தலைவர்கள் பலர். அவர்தம் நூல்களும் பல. அவற்றுள் இரண்டனை மட்டும் இங்கே காணலாம். ஒன்று தமிழுக்கே ‘ஒப்பிலக்கணத்தால்’ அரணமைத்த கால்டுவெல் ஐயர் எழுதியது (1887). மற்றென்று ஞானப்பிரகாசர் எழுதியது (1884).
(பாளையம் கோட்டை) 1887.
வினா:பரிசுத்த ஆவியானவர் என்னசெய்கிறார்?
விடை: தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய இருதயத்தைப் பரிசுத்தம் செய்கிறார்.
வினா; ஏன் அவர் அதைப் பரிசுத்தம் செய்ய வேண்டும்?
விடை: அது அசுத்தமாயிருப்பதானாலே அதைப் பரிசுத்தம் செய்ய வேண்டும்.
வினா: எவைகளில் அவை அசுத்தமாயிருக்கிறது?
விடை: பாவ இச்சைகள், பாவ யோசனைகள், பாவ குண நடவடிக்கை இவைகளினால் அசுத்தமாயிருக்கிறது.
நற்கருணை மாலைசிறு வினாவிடை (பாளையங்கோட்டை) ஒய். ஞானப்ரகாசர் 1884
40வது வினா-இராப் போசனம் பந்தியில் சேர்வதால் பிரயோசனம் என்ன?
விடை: இந்தப் பந்தியிற் சேர்ந்து இதன் மூலமாய்க்கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்ந்து