பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

477


ஒளிந்திருந்தேனே! என் அன்னையைப் போய்ப் பார்க்கவேண்டுமென்று என் பாழாய்ப்போன மனத்துக்குத் தோன்றவே இல்லையே? சக்கசேனாபதி பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று என் தாய் அடிக்கடி ஒரு பழமொழியைச் சொல்லுவாள். அதற்கேற்றாற் போலவே, நானும் நடந்து கொண்டிருக்கிறேன். στoor செயல்களையெல்லாம் தெரிந்து கொண்டால் என் தாயின் மனம் என்ன பாடுபடும்? என்னால் யாருக்கு என்ன பயன்? எல்லோருக்குமே கெட்ட பிள்ளையாக நடந்து கொண்டு விட்டேன். இதையெல்லாம் நினைத்தால் எனக்கே அழுகை அழுகையாக வருகிறது. மகாமண்டலேசுவரர் என்னைப் பற்றி எவ்வளவோ நம்பிக்கையும் நல்ல எண்ணமும் வைத்துக்கொண்டு இடையாற்று மலங்கலத்தில் கொண்டுபோய்த் தங்கச் செய்திருந்தார். நான் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து ஏமாற்றி அரசுரிமைப் பொருள்களைக் கவர்ந்துகொண்டு வந்துவிட்டேனே!” என்று சக்கசேனாபதியிடம் அழுதுகொண்டே சொல்லிப் புலம்பினான் அவன். என்ன கூறி எந்த விதத்தில் அவனைச் சமாதானப் படுத்துவதென்றே அவருக்குத் தெரியவில்லை.

“இல்லாததையெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு அழாதீர்கள். சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி நடத்திக்கொண்டு போகின்றனவோ, அப்படித்தானே நாம் நடக்க முடியும்? உங்கள்மேல் என்ன தவறு இருக்கிறது? மகாமண்டலேசுவரர் உங்களை அவ்வளவு கட்டுக்காவலில் இரகசியமாக வைக்காவிட்டால் நீங்கள் உங்கள் அன்னையைச் சந்தித்திருக்க முடியுமா. போரும், பகைவர் பயமும் உள்ள இந்தச் சூழலில் அரசுரிமைச் சின்னங்கள் இடையாற்று மங்கலத்தில் இருப்பதைவிட இலங்கையில் இருப்பதே நல்லது” என்று ஒருவிதமாக ஆறுதல் சொன்னார்.

“என்னை அங்கே கூட்டிக்கொண்டுபோய் அவற்றைக் காண்பியுங்கள்” என்று கப்பலில் அரசுரிமைப் பொருள்கள் வைத்திருந்த அறையைச் சுட்டிக் காட்டிப் பிடிவாதம் பிடித்தான் அவன.