இன கனவிலி மனம் 89 நனவிலி மனத்திலே இரண்டு விதமான ஆற்றல் கள் உண்டு என்றும் யுங் கூறியுள்ளார். அனிமா (Anima) என்று ஒரு ஆற்றலையும், மற்ருெரு ஆற்றலை நிழல் (Shadow) என்றும் அவர் வழங்கினர். அனிமா ஆற்றலானது ஒருவனுடைய அகத்தையும் அதன் வழியாக அவனுடைய ஆளுமையையும் மேலோங்கச் செய்கிறது. அனிமா ஆற்றல் ஒருவனிடத்தில் திறம்பட வேலை செய்தால் அவனுக்கு எந்தத் துறையில் திறமை இருக்கிறதோ,அந்தத்துறையில் அவன் சிறந்து விளங்கு வான். கவிதை, இசை, சிற்பம் முதலான துறைகளில் புகழ்பெற அனிமா ஆற்றல் சிறப்பாக உதவுகிறது. அனிமா ஆற்றலுக்கு மாருன தன்மைகளை நிழலாற்றல் ஒருவனுடைய ஆளுமையில் தோற்றுவிக்கின்றது. காமுகனும், பிறரை வெறுப்பவனும் இந்த நிழல் ஆற்ற லின் ஆதிக்கத்திலே இருப்பவர்கள் என்று கூறலாம். ஒருவனுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை ஆராய் வதோடு யுங் நின்றுவிடுவதில்லை. இந்தப் பிரபஞ் சத்தில் அம்மனிதனுக்கு உரித்தான இடத்தையும் அறிந்துகொள்ளுமாறு செய்ய அவர் முனைந்தார். ஆகையால் மனித மனத்தின் இன்னும் ஆழமான பகுதிக்கு யுங் செல்கிருர் என்று நாம் கூற முடியும். ஆதலால் அவர் மேல்நாட்டு உளவியலார்களின் திறமையைக் கொண்டிருப்பதோடு பாரத தேசத்து யோகிகளின் உள்ளுணர்வு ஆற்றலையும் கொண் டிருந்தார் எனலாம். வெளி உலகத்திலிருந்து ஒருவ னுக்கு ஏற்படும் அனுபவங்களை அவர் தெரிந்துகொள்ள முடிந்ததோடு மனத்திலே ஒலிக்கும் உள் ஒலியையும், மனத்திலே ஒளி வி டு ம் ஆன்மாவையும் அவர் விளக்கிக் கூற முயன்ருர். அதேைலயே அவருடைய முறை விஞ்ஞான அடிப்படையாக இல்லை என்று பலர்