இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25.அன்னை அன்பு
அன்னை அன்பு
என்னப் பெற்ற நற்றாயே,
எங்கே அன்பு கற்றாயே?
‘என்றன் கண்ணே’ என்பாயே,
எனக்குத் தந்தே தின்பாயே.
கண்டால் முத்தம் அளிப்பாயே,
கட்டி அணைத்துக் களிப்பாயே.
ஆடை அணிகள் தரிப்பாயே,
அழகு பார்த்துச் சிரிப்பாயே.
‘அம்மா, தலை நோய்?’ என்றாலும்,
அலுத்துக் களைத்து நின்றாலும்,
அழுது கண்ணீர் வடிப்பாயே;
அன்பால் நெஞ்சம் துடிப்பாயே.
தெய்வம் என்றே துணிவேனே,
தினமுன் பாதம் பணிவேனே.
அன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம்.
27