அருகே இருந்த அரிய நாவல்
மரத்தின் நிழலை அடைந்தாள்;
பருக வேண்டிப் பலவும் எண்ணிப்
பெரிதும் உள்ளம் உடைந்தாள்.
4
மரத்தின் மேலோர் சிறுவன் கனிகள்
பறித்தல் கண்டு மகிழ்ந்தாள்;-அவள்
உரத்துக் கூவித் தனக்கும் சிறிதே
உலுக்கிப் போடப் புகழ்ந்தாள்.
5
‘சுட்ட பழமோ? சுடுதல் இல்லாப்
பழங்கள் தரவோ? சொல்லாய்-நின்
இட்டம் உரைப்பின் ஈவேன் உனக்கே
இயம்ப வேண்டும் நல்லாய்.’
6
சிறுவன் கூறும் சொல்லின் பொருளைச்
சிந்தை செய்ய லானாள்;-பொருள்
அறியா ளாகி ஐயம் தீரும்
வகையில் வினவ லானாள்.
7
‘சுடுதல் இல்லாக் கனிதா’ என்றே
சொல்லி முடிக்கு முன்னே-அவன்
கடிதே கிளையைக் குலுக்க உதிரும்
காயும் கனியும் என்னே!
8
நாவல் மரத்தின் நலமார் கனிகள்
நிலத்தில் இருத்தல் கண்டாள்-நீர்
ஆவல் மிகுந்த அவ்வைக் கிழவி
அகத்தில் மகிழ்வு கொண்டாள்.
9
52