திருவள்ளுவர் திருக்குறள்.
பொருள். பொறிவாயில் ஐந்தும் அவித்தான்- பொறிவாயில் (ஐந்தின் புலன்) ஐந்தும் ஒழித்தவனது, பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் - குற்றமற்ற நெறியின் கண் (நிலையாக) நின்றவர், நீடு வாழ்வார்- (வீட்டுலகின் கண்) நெடுங்காலம் வாழ்வர்.
அகலம். பொறி வாயில் ஐந்தாவன:- மெய், வாய், கண், மூக்கு, செவி. புலன் ஐந்தாவன:-ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை. தீர் என்பது வினைத்தொகை. ஐந்தும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் கெட்டது.
- கருத்து.கடவுளை உணர்ந்தார் வீட்டினை அடைவர்.
எ. தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது.
பொருள். தனக்கு உவமை இல்லாதான்- தனக்கு ஒப்பு இல்லாதவனது, தான் சேர்த்தார்க்கு அல்லால் (ஏனையோர்க்கு)-அடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு, மனக் கவலை மாற்றல் அரிது. - உள்ளக் கவலையை நீக்குதல் அரிது.
அகலம். " ஏனையோர்க்கு' என்பது சொல்லெச்சம். ‘சொல்லெச்சம்' என்பது சொல் குறைந்து நிற்றல். அரிது என்பது இயலாது என்னும் பொருட்டு. நச்சர் பாடம் ‘தாள் சேர்ந்தா ரல்லார்’.
கருந்து. கடவுளை உணர்ந்தவர்க்குக் கவலை இல்லை.
- அ.அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
- பிறவாழி நீந்த லரிது.
பொருள். அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் (ஏனையோர்க்கு) - அறக் கடலின் அழகிய தண்மையை யுடையவனது அடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு, பிற ஆழி நீந்தல் அரிது - மறக் கடலைக் கடத்தல் அரிது. -
104