பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உருஎ. சுட்டுமுதலிறுதி யியல்பா கும்மே. கூக இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-சுட்டு முதல் இறுதி இயல்பாகும் -சுட்டெழுத்தினை முதலாகவுடைய உக ளற்றுப்பெயர் மேற்கூறிய வல்லெழுத்தூ மிகாது இயல்பாய் முடியும். உ-ம். அதுகுறிது, இதுகுறிது உதுகுறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். (ருரு ) உருஅ. அன்றுவரு காலை யாவா குதலும் ஐவரு காலை மெய்வரைத்து கெடுதலும் செய்யுண மருங்கி அரித்தென் மொழிய இஃது,இவ்வீற்றுச் சுட்டுமுதற்பெயர்க்கு ஓர் செய்யுள்முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- அன்று வருகாலை ஆ ஆகுதலும் - அதிகாரத்தான் நின்ற சுட்டுமுதல் உகர வீற்றுப்பெயர் அன்று என்னும்சொல் வருமொழியாய் வருங்காலத்து அவ்வுகரம் ஆகாரமாகித் திரிந்துமுடிதலும், ஐ வருகாலை மெய் வரைந்து கெடுதலும் - ஐ என்னும் சாரியை இடைவந்து முடியுங்காலத்து அவ்வுகரம் தான் ஊர்ந்த மெய்யை ஒழித்துக் கெட்டுமுடிதலும், செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப -அவ்விருமுடியும் செய் யுட்கண் உரித்தென்று சொல்லுவர். உ-ம் அதாஅன்றம்ம, இதாஅன்றம்ம, உதா அன்றம்ம எனவும்; அதை மற்றம்ம, இதைமற்றம்ம, உதைமற்றம்ம எனவும் வரும். உருக. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. (ருசு) இஃது, இவ்வீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - உகரவீற்றுப்பெயர் வேற் றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்ணும் அவ்வகரவீற்று அவ்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உம். கடுக்காய்; செதிள், தோல், பூ எனவரும். உகம் எருவுஞ் செருவு மமொடு சுவணிக் திரிபிட னுடைய தெரியுங் காலை அம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை. (ருஎ) இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலகிச் சாரியை விதியும் ஒன் றற்கு வல்லெழுத்தினொடு சாரியை விதியும் கூறுதல் நுதலிற்று. இ-ள்: எருவும் செருவும் அம்மொடு சிவணி திரிபு இடன் உடைய தெரியும் காலை - எரு என்னும் சொல்லும் செரு என்னும் சொல்லும் அம்முச்சாரியையொடு பொருந்தி முன் சொன்ன வேற்றுமைப் பொதுவிதியின் வேறுபட்டு முடியும் இடனு டைய ஆராயுங்காலத்து; அம்மின் மகரம் செருவயின் கெடும் - அவ்வம்முச்சாரியையது ஈற்றின் மகரம்செரு என்னும் சொல்விடத்துக்கெட்டு முடியும்; வல்லெழுத்து இயற்கை தம் ஒற்று மிகூம் - அவ்வாறு கெட்டவிடத்துச் செரு என்பது வல்லெழுத்தாகிய இயல்பையுடைய தமது ஒற்று மிக்கு முடியும்.