பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம்-உயிர்மயங்கியல் உ-ம். கோயில் எனவரும். க நிலைமொழி ஒகரவெழுத்துப்பேறும் வரையாது கூறினவழி நான்கு கணத்துக்கண் ணும் செல்லுமென்பதனாற் பெற்றாம். கோவென்றது உயர்தினைப்பெயரன்றோ வெனின், கோவந்ததென அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற் பட்டது போலும். உகூரு. உருபிய னிலையு மொழிபுமா ருளவே ஆவயின் வல்லெழுத் நிபதிகை யாகும். (கூக) இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தமை யின் எய்தியது விலக்கிப் பிறி துவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- உருபு இயல் நிலையும் - மொழியும் உள-அல்வீற்றுட் சில உருபுபுணர்ச்சி யது இயல்பிலே நின்று ஒன்சாரியை பெற்றுமுடியும் மொழிகளும் உள; அ வயின் வல் லெழுத்து இயற்கை ஆகும் அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும். உ-ம். கோஒன்கை; செவி, தலை, புறம் எனவரும். இதனானும் பெற்றாம், சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்து விலக்காமை. (க) உகூகூ ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்னர் அவ்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே அவ்விரு வீத்தும் உகரம் வருதல் செய்வி தென்பறந்திசி ஜேகே இஃது,ஒளகாரவீறு அவ்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் முடியுமாறு கூறு தல் நுதலிற்று. இ-ள்:- ஒளகார இறுதி பெயர்நிலை முன்னர் அல்வழியானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை இன்று - ஒளகார வீற்றுப் பெயர்ச்சொல் முன்னர் வல்லெழுத்துமுதல்மொழி வரின் அவை அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிக்குமுடிதல் நீக்கும் நிலையின்றாம். அ இரு ஈற்றும் உகரம் வகுதல் செவ்விது என்ப சிறந்திசினோர் - அவ்விருகூற்று முடிபின்கண்ணும் நிலைமொழிக் கண் உகரம் வந்துமுடிதல் செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர். உம். கெளவுக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்: கௌவுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். 'செவ்விது' என்றதனான், மென்கணத்துக்கண்ணும் இடைக்கணத்துக்கண்ணும் இருவழியும் உகரப்பேறுகொள்க. கௌவுஞான்றது, கெளவுஞாற்சி எனவும்; கெளவு வலிது, கெளவு வலிமை எனவும்வரும். 'நிலை' என்றதனால், கௌவின்கடுமை என உருபிற்குச்சென்றசாரியை பொருட் கண் சென்றவழி, இயைபுவல்லெழுத்து வீழ்வுகொள்க. ஏழாவது-உயிர்மயங்கியல் முற்றிற்று. (2)