பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176



தூர்த்தன இலங்கையைச்
        சூழ்ந்து மாக்குரங்கு
ஆர்த்தன கேட்டு உவந்து
        இருத்தி அன்னை நீ

தேவியாகிய நீ என் மூலம் சொல்லியனுப்பிய சொற்கள் கேட்டு இராமபிரானும் சுக்கிரீவனும் மகிழ்கிற அந்தக் கணநேரத்திற்கு முன்பே பெரிய பெரிய வானரங்கள் எல்லாம் இந்த இலங்கையைச் சூழ்ந்து கொண்டு பெரு முழக்கம் செய்வன கேட்பாய்;

***

அன்னை - தாயே! தீர்த்தனும் - தூயவனாகிய இராம பிராமனும்; கவிக்குலத்து இறையும் - குரங்கினங்களின் அரசனாகிய சுக்கிரீவனும்; தேவி, நின் வார்த்தை கேட்டு - தேவியான நீ சொல்லியனுப்பிய சொற்களைக் கேட்டு; உவப்பதன் முன் - மகிழ்வதன் முன்னதாக; மா கடல் தூர்த்தன - இடையேயுள்ள பெரிய கடலைத் துர்த்தவைகளாய்; இலங்கையைச் சூழ்ந்து - இந்த இலங்கைச் சுற்றி வளைத்துக் கொண்டு; மா குரங்கு - பெரிய குரங்குகள்; ஆர்த்தன கேட்டு - பெரு முழக்கம் செய்வன கேட்டு; நீ உவந்து இருத்தி - நீ மகிழ்ந்திருப்பாயாக.

***

எண்ணரும் பெரும் படை
        ஈண்டி இந் நகர்
நண்ணிய பொழுதது
        நடுவண் நங்கை நீ
வில்லுறு கலுழன் மேல்
       விளங்கும் விண்டுவின்
கண்ணனை என் நெடு
       புயத்தில் காண்டியால்.