162
சங்க இலக்கியத்
(புறநா : 285 பழைய உரை) இக்கையால் தன் தலையை நீவி, அன்பு காட்டியதை ஔவையார் :
“நரந்தம் நாறும் தன் கையால்
புலவுநாறும் என்தலை தைவரு மன்னே”-புறநா: 235 : 8-9
நரந்தம்பூவை மகளிர் தம் கூந்தலிற் சூடுவர். “நரந்தம் நாறும் குவை இருங்கூந்தல்” என்னும் தொடரைப் பரணரும், பனம்பாரனாரும் ஓர் எழுத்தும் மாறாமல் ஆளுகின்றனர்.
“நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
இளந்துணை மகளிரொடு”-அகநா: 266 : 4-5
“நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
நிறத்து இலங்கு வெண்பல் மடந்தை”-குறுந்: 52 : 3-4
ஒரு தலைமகன். தன் காதலியுடன் குலவிய போது, அவளது கூந்தலில் இருந்து நரந்தங்கோதையை விரலால் சுற்றி, மணம் பெற்ற விரலை மோந்து மகிழ்ந்தான் என்பர் :
“நரந்தம் நாறும் கூந்தல் எஞ்சாதுபற்றி
பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம்பெறச் சுற்றிய குரல்அமை ஓர்காழ்
விரல்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்”
-கலி: 54 : 5-8
(நுங்கிய - செய்த; சிகழிகை - தலைக்கோலம்)
மேலும், அந்நாளில் யாழிற்கும் நரந்த மாலை சூட்டப்பட்டதென்றும் கூறுவர்.
“நரத்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்”
-புறநா: 302 : 4-5
நரந்த மலர் வெண்மையானது; நறுமணம் உடையது; மணம் நெடுநாள் வரை நீடிக்கும். வேங்கை மலருங்கால் இதுவும் மலரும்.
நரந்தம் என்ற புல் ஒன்று உண்டு; இதற்கும் நறுமணம் உண்டு. இதனைக் கவரிமான் விரும்பி மேயும். தாவரவியலில் இப்புல்லுக்கு சிம்போபோகன் சிட்ரேட்டஸ் (Cymbopogan citratus) என்று பெயர். ஆங்கிலத்தில், இதனை லெமன் கிராஸ் (Lemon grass) என்றழைப்பர். இதன் விளக்கவுரையை, ‘நரந்தம்புல்’ என்ற தலைப்பில் காணலாம்.