பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - -T - கவியரசர் முடியரசன் 163 --- - _-- --- பொதுவாக ஒரே பொருளைத் தருவனவேனும், அவற்றிற்குச் சிறப்புப் பொருளும் உண்டு. உள்ளத்தாற் பொய்யா தொழுகுவது உண்மை வாயாற் பொய்யாதொழுகுவது வாய்மை; மெய்யால் (செயலால்) பொய்யாதொழுகுவது மெய்ம்மை. மனம், சொல், செயல் மூன்றாலும் பொய்யா தொழுக வேண்டுமென்பது கருத்து. இச்சொற்கள் உணர்த்துந் தமிழ்ப் பண்பாட்டை நினையுந் தொறும் நெஞ்சம் மகிழ்கிறது. இம் மூவகையாலும் நீ தூயவனாக வாழவேண்டுமென்ற ஆர்வத்தால் இப்பொருளை விளக்கி எழுதினேன். வாய்மை, அல்லது உண்மை என்றால் என்ன ? என்பதை முதலிற் புரிந்துகொள்ள வேண்டும். கண்டதைக் கண்டவாறே சொல்லுதல், நிகழ்ந்ததை நிகழ்ந்தபடியே சொல்லுதல் வாய்மை என்று கருதிக்கொண்டிருப்பாய். அஃது ஒரளவுக்கு உண்மையாயினும், நம் தமிழ் மறையாகிய வள்ளுவம் வாய்மைக்குத் தனியிலக்கணம் வகுத்துப் புது விளக்கந் தருகிறது. மற்ற வுயிர்க்குச் சிறிதுந் தீங்கு பயவாத சொற்களைச் சொல்லுதலே வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படும்’ என்பது வள்ளுவர் வகுத்த வழி. அது கண்டதற்கு மாறாக இருந்தாலும் நிகழ்ந்ததற்கு வேறாக இருந்தாலும், சிறிது கூடத் தீமை பயவாத சொல்லாக இருக்குமானால் அஃதொன்றே வாய்மை எனப்படும். கண்டதாக இருந்தும், நிகழ்ந்ததாக இருந்தும், ஒரு சிறு திமையேனும் தருமானால் அது பொய்ம்மை தான் என்பது பெறப்படுகிறது. கண்டதற்கும் நிகழ்ந்ததற்கும் மாறாக உரைப்பது பொய்ம்மையன்றோ ? என வினவலாம். அது பொய்ம்மை