பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று; வாய்ம்மையின் பாற்பட்டதாகவே கொள்ளத்தக்க தாகும். ஆனால், அச்சொல் நன்மை பயப்பதாக புரை தீர்ந்த நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது வாய்மையின் பாற்படும்; நன்மை பயவாதாயின் பொய்ம்மைதான். நமக்கு நன்மை பயப்பதற் காகப் பொய்ம்மை கூறின், அது வாய்மையின் பாலதன்று. பிறர்க்கு நன்மை பயப்பதாகவே இருக்க வேண்டும். ஒருவன் பெருங் கேட்டிலோ சாக் காட்டிலோ சிக்கிக் கொள்ளும் சூழ்நிலையில் இருக்கிறான் என்று வைத்துக் கொள். அதனினின்று நீக்கி, இன்புறும் நிலையைத் தருமானால், அப் பொய்ம்மையும் வாய்மையிடத்ததுதான். இவனைக் காப்பதற்காக உரைப்பது, மற்றையோர்க்குத் தீங்கு பயப்பதாக இருந்துவிடக்கூடாது. அதனாற்றான் புரைதிர்ந்த நன்மை எனப்பட்டது. சுருங்கக் கூறின், நிகழ்ந்தது கூறுங்கால் தீங்கு பயக்குமாயின் பொய்ம்மை; தீங்கு பயவாவிடின் மெய்ம்மை. நிகழாதது கூறுங்கால் நன்மை பயக்குமாயின் மெய்ம்மை; நன்மை பயவாவிடின் பொய்ம்மை என்க. பிறர் அறிந்தி லர் என்று, நெஞ்சறிந்த ஒன்றை எப்பொழுதுமே பொய்த்தல் கூடாது. பொய்த்தால் அஃது, என்றும் உள்ளிருந்து சுட்டுக்கொண்டேயிருக்கும்; உறுத்தி யுறுத்தித் துன்பத்தை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும். மனச்சான்றை மறைத்துவிட முடியாது. நெஞ்சையொளித் தொரு வஞ்சகம் இல்லையல்லவா ? தானஞ் செய்வாரும் தவஞ் செய்வாரும் மிகச் சிறந்தவர் என்பர். அவரினும் தலையாய சிறப்புக் குரியவர் வாய்மையாளர். அவர் மொழியும் வாய்மை, மனத்தொடு பொருந்திவர வேண்டும்.