உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் - 19) ஆசிரியருக்கு மட்டும் அத்துணைப் பொறுப்பு களையும் விட்டுவிடாமல் நான் உனக்கு அடிக்கடி இவ்வாறு எழுதுகிறேன்.

‘ஈன்று புறந்தரல் என்றலைக் கடனே’ என்ற பழம் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது.இப்பாடலில் பலருடைய கடமைகளை உணர்த்துகிறார் அதனைப் பாடிய பொன் முடியார் என்ற பெண்பாற் புலவர். பிள்ளையைப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்து ஆளாக்குவது கடமையாகும. அவனைச சான்றோாக்குவது தந்தைக்குக் கடமையாகும். அவனுக்கு வேல் வடித்துக் கொடுப்பது கொல்லனுக்குக் கடமையாகும். அவனுக்குப் பயிற்சியளித்து நன்னெறிப் படுத்துவது வேந்த னுக்குரிய கடமையாகும். போர்க்களம் புகுந்து களிறுகளையடக்கி வெற்றி வீரனாகத் திரும்புவது அவ்விளைஞனுக்குக் கடமையாகும். அஃதாவது அவன் நாட்டிற்குப் பயன்படுபவனாக இருத்தல் வேண்டும் என்பது அப்புறநாநூற்றுப் பாடலின் கருத்தாகும்.

ஒருவன் நாட்டிற்குப் பயன்படுபவனாக நல்வனாக வெற்றி வீரனாக விளங்க வேண்டுமென்றால் வீட்டிலுள்ள பெற்றோருக்கும் நாட்டிலுள்ள மற்றோருக்கும் சில கடமைகள் உள அக் கடமைகளை உணர்ந்து அவரவர் நடந்தால் நல்ல மக்களை உருவாக்கலாம். அஃதாவது பிள்ளைகள் நல்லவர்களாக வளர வேண்டுமானால் அகச் சூழலும் புறச் சூழலும் அத்துறையில் அக்கறை காட்டுதல் வேண்டும் என்பது கருத்து. அதனாற்றான் உன்னைநல்லவனாக உருவாக்க ஆசிரியரிடம் மட்டும் பொறுப்பை ஒப்படைத்து விடாமல் நானும் எனது கடமையைச் செய்கிறேன்.