பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(52 -அன்புள்ள இளவரசனுக்கு . – – - - வருகிறது. இச் சொற்றொடர்ப் பொருளைச் சிற்றறிவினரும் புரிந்து கொள்வர். எனினும் இத் தொடருக்கு அடிக்குறிப்பு எழுதப்பட்டிருந்தது. “மீன் பொறித்தான் என்பது மீன் பொரிய லைக் குறிக்க வில்லை” என்னும் முறையில் ஏனைப் பொருளில் இருந்தது அக்குறிப்பு. இமயத்தில் பாண்டியன் மீன் பொறித்தான் என்றால் தமிழ் மகனுக்கு வீரச் சுவையல்லவா தோன்ற வேண்டும் ? வீரம் இன்று குறைவு பட்டிருந்தாலும் நம் முன்னோர் வீரராக வாழ்ந்தன ரே என்று பெருமிதமல்லவா கொள்ள வேண்டும் ? வீரச் சுவைக்கு மாறாகக் கட்டுரையாளர்க்கு உணவுச் சுவை தோன்றி விட்டது. புலவுக் கடையிலே ஒரு முறை ஏறி இறங்குகிறார். மீன் வறுவல் நினைவிற்கு வந்து விடுகிறது. அந்நினைவு மிகு தியால் மீன் பொரியலை அடிக்குறிப்பாகக் கொடுத்து விடுகிறார். கட்டுரையாளர் நன்கு கற்றறிந்தவர்; நீதிபதியாக இருப்பவர்; இலக்கியப் பரம்பரைக்கே நாங்கள் தாம் வாரிசு என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தைச் சேர்ந்த வருங் கூட. இப்படிப்பட்ட பெருமகனார்தாம் இவ்வாறு எழுதுகிறார் ஏளனமாக. பத்திரிகை உலகில் கதிர்வீசி வெளிவந்து கொண்டி ருக்கிறது மற்றோர் இதழ். அவ்விதழில் ஒர் ஆராய்ச்சிக் கட்டுரை (நகைச்சுவைக்காக) வெளிவந்தது. ஆராய்ச்சி யென்றால் சாதார ண ஆராய்ச்சி யென்று எண் ணி விடாதே. அறிவைப் பழுக்கக் காய்ச்சித் தட்டி, உருட்டிக் கூராக்கி, அதைக் கொண்டு எழுதப்பட்டது. தமிழகம், வான் புகழ் கொள்ள உலகுக்கு ஈந்தது யாரை ? வாழ்வு நூல் தந்தவர் யார் ? தமிழருக்கும் ஒர் உயரிய மறையுண்டு என்று தலை நிமிர்ந்து பேசும்படியான நூலைத் தந்தவர்