671
“. . . . . . . . கணவிரி காந்தள்
தாய தோன்றி தீயென மலரா ”
–பரி. 11 : 20-21
எனவும்; கேசவனார்
“நீரயற் கலித்த நெறிமுகைக் காந்தள்
வார்குலை அவிழ்ந்த வள்இதழ் நிரைதொறும்
விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி
பவழத் தன்ன செம்பூத் தாஅய்”
-பரி. 4 : 13-16
எனவும், நப்பண்ணனார்
“கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்
. . . . . . . . . . . . . . . .
உருவமிகு தோன்றி ஊழ்இணர் நறவம்”
-பரி. 19 : 76-78
எனவும் காந்தளையும், தோன்றியையும் வெவ்வேறு மலர்களாகக் கூறியுள்ளவாறு போல நப்பூதனார்,
“கோடற் குவிமுகை அங்கை அவிழ
தோடார் தோன்றி குருதி பூப்ப”
-முல்லைப். 95-96
என்பர்.
“காலங்கருதித் தோன்றி கை குனிப்பக்
கோடல் வளைந்த வள்ளலர் உகுப்ப [1]
எனவும் தோன்றியையும், கோடலையும் கல்லாடனார் வெவ்வேறாகக் காட்டியுள்ளார். பிங்கல நிகண்டு.
“தோன்றி பற்றை இலாங்கூலி செங்காந்தள்” எனவும்
“கோடல் தோன்றி கோடைவெண் காந்தள்”[2]
எனவும் கூறுதலின், தோன்றி என்பது செங்காந்தள், வெண்காந்தள் என இரண்டையும் குறிக்கிறது.
“வெண்காந்தளின் செங்காந்தள் என்றிரு விகற்பமும்
கொண்டே வழங்கும் சோடைப் பெயரே [3]
எனக் கோடலைச் செங்காந்தள், வெண்காந்தள் இரண்டிற்கும் பெயராகச் சூடாமணி நிகண்டு கூறியுள்ளது.
“காந்துகம், தோன்றி, பற்றை கோடல் என்
றாய்ந்த நான்கும் காந்தள் ஆகும் [4]
எனச் சேந்தன் திவாகரமும் கூறும்.