இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
63
“வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்”-புறநா. 388:3-4
ஐயவி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | தாலமிபுளோரே (Thalamiflorae) பெரெய்டேலீஸ் (Parietales) |
தாவரக் குடும்பம் | : | குரூசிபெரே (Cruciferae) |
தாவரப் பேரினப் பெயர் | : | பிராசிக்கா (Brassica) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஆல்பா (alba) |
சங்க இலக்கியப் பெயர் | : | ஜயவி |
உலக வழக்குப் பெயர் | : | வெண்கடுகு |
தாவர இயல்பு | : | 2 அடி உயரம் வரை வளரும் சிறு செடி. அடியில் கிழங்கு இருக்கும். மேல் தண்டு முழுவதும் நுண்ணிய மயிர் நிறைந்திருக்கும். ஓராண்டுச் செடி. |
இலை | : | சிறகன்ன பிளவுள்ள கூட்டு இலை முழுவதும் சிறுமயிர் அடர்ந்திருக்கும். சிற்றிலைகள் முட்டை வடிவானவை. |
மஞ்சரி | : | மஞ்சள் நிற மலர்கள் நுனி வளர்பூங்கொத்தில் உண்டாகும். |
மலர் | : | மஞ்சள் நிறமானது. |
கனி | : | ‘பாட்’ எனப்படும். இதன் கனியில் உண்டாகும் விதைகள் வெண்ணிறமானவை. சிறு வெண்கடுகு எனப்படுவது இதுவே. |
இது கடுகுக்காகப் பயிரிடப்படுகிறது. இது ஒரு நல்ல மருந்துப் பொருள் என்பர். இதில் ‘கடுகு எண்ணெய்’ எடுக்கப்படுகிறது.