இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
123
வெளியாகும் கிணறு (Artesian Well) உண்டாக்க முயற்சித்ததில் பயன் பெறவில்லை.
நூல் | : | திருக்குடந்தை புராண வசனம் (1932) |
மகாமக தீர்த்த மகிமைப் படலம், பக்கம். 51 | ||
நூலாசிரியர் | : | புது. இரத்தினசாமி பிள்ளை |
(கும்பகோணம் பஜார் போஸ்ட் மாஸ்டர்) |
நிலைச்செண்டு என்பது நின்ற நிலையிலிருந்தே பந்துகளை வீசி விளையாடுவது போலும். தற்காலம் (Tennis) டென்னிஸ் முதலியன போல)
நூல் | : | சேக்கிழார் (1933) |
நூலாசிரியர் | : | கோவை - வழக்கறிஞர் |
சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ., |
பிரமதேவர் கும்பேசருக்கு ஒன்பது நாள் உத்சவம் நடத்திய பின்னர், பத்தாம் நாள் அவபிருத ஸ்நானம் நடத்தி உத்சவத்தை பூர்த்தி செய்த விஷயம் ஈண்டு கூறப்படும். அவபிருதம் - முடிவு: இங்கு உத்சவ முடிவின் நீராட்டு.
நூல் | : | கும்ப கோண ஸ்தலபுராண வசனம் (1933) |
மகாமக தீர்த்த மகிமை, பக்கம் - 45 | ||
நூலாசிரியர் | : | ஸ்கூல் இன்ஸ்பெக்டர் சாமிநாத முதலியார் |
Documentary Evidence – சுவடிக் கூறு
ஆவணம் என்பது, ஒரு வழக்கைத் தீர்மானிக்க உதவும் சுவடி ஓலை முதலிய எழுத்துச் சீட்டுக்கள். அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியை கண்டார் சொல்வது. இவை முறையே (Oral Evidence) வாய்மொழிக்கூறு என்றும், (Documentary Evidence) சுவடிக் கூறு என்றும் தற்கால ஆங்கில நீதிமுறையில் பேசப்பெறும்.
நூல் | : | சேக்கிழார் 1933 (முதற்பதிப்பு) |
நூலாசிரியர் | : | கோவை வழக்கறிஞர் |
சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ., |