—11—
தீண்டாதார் சுத்தமற்றோர் என்றால்ச் சுத்தத்தன்மை
தாண்டாதார் எங்குண்டடி? - சகியே தாண்டாதார்
57
தீண்டாதார் ஊனுண்டால் தீண்டு மனிதர் வாய்க்குள்
மாண்டன பல்கோடியாம் - சகியே மாண்டன பல்
58
பறவை மிருகமுண்டோர் பறையர் என்றல் மனுநூல்
முறையென்பார் பேரென்னடி? - சகியே முறையென்
59
வெறிமது உண்போர்நீசர் என்றல் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டேதுக்கடி? -- சகியே நிறைமுக்கா டே
60
சீலம்குறைந்தோர் என்றல் சீலமிலாச் சிலரை
ஞாலத்தில் ஏன் தீண்டினார்? - சகியே ஞாலத்
61
மேலைவழக்கங் கொண்டு மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக்
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? - சகியே காலத்தில்
62
சாத்திரம் தள்ளிற்றென்றல் சாற்றும் அதுதான்எங்கள்
கோத்திரத் தார்செய்ததோ? - சகியே கோத்திரத் தார்
63
வாய்த்திறம் கொண்டமக்கள் வஞ்சம் யாவையும் நம்பி
நேத்திரம் கெட்டோமடி - சகியே நேத்திரம் கெட்
64
மனிதரிற் றாழ்வுயர்வு வகுக்கும் மடையர்வார்த்தை
இனிச்செல்ல மாட்டாதடி - சகியே இனிச்செல்ல
65
கனிமா மரம் வாழைக்காய் காய்க்காதெனில் இரண்டும்
தனித்தனிச் சாதியடி - சகியே தனித்தனிச் சாதியடி
66