இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உழவரின் தோளில், உளத்தினிற் பொங்கல் !
- ஊர்ப்பொது மன்றினில் காளை
- முழக்கொலி கேட்டு வந்தது கூட்டம் !
- வெற்றியின் நீள்முர சார்க்கும்!
- இழந்ததை நாமே அடைந்தனம்: வாழ்க !
- இன்றலோ நம்மரும் பொங்கல்!
- கிழவரும் காளை ஆகினர்; பாட்டிச்
- சிரிப்பொலி தேன்சுவை யாமே! 4
பொன்மலர், பொற்றா மரைமலர், நம்வாழ்வின்
- நன்மலர் பூத்தது; வெற்றி நமதாம்!
- விரிந்த மலர்க்காடு நீர்நிலை மேடும்
- பரந்ததுகாண் தங்கப் பரிதி! குளிரோ
- விறைந்தது மெல்லப் புறங்காட்டி! வாழ்வில் 5
- நிறைந்ததுவாம் இன்பம்! நெடுநாள் பகையோ
- குறைந்தது; யாவும் குறைந்தது; வாழ்க !
- குளிர்புனல் ஓடை கொடிபுதற் தோப்பு
- வளர்ந்தது செங்கதிர்; வாழிய! வாழிய!
- வையமெலாம் ‘பொங்கலோ பொங்கல்’ தமிழிசைத்தேன் 10
- மெய்யில் உயிரில் புகுந்து மிகுந்து
- விரிந்தது; வாழ்க நிலைத்து ! 12
52