உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

மக்சீம் கார்க்கி


மூலம் அவளுக்குச் சௌகரியம் செய்து கொடுப்பதில் தாங்கள் எவ்வளவு. அக்கறைகொண்டவர்கள் என்பதைக் காட்டிக்கொண்டார்கள்.

தடால் வண்டியில் ஏறி உட்கார்ந்ததுமே, தாய் நினைத்தாள். ஸ்திபான் ஒரு வயலெலியைப்போல மிகுந்த ஜாக்கிரதையோடும் சத்தமின்றியும், களைப்படையாமலும் வேலை செய்யத் தொடங்குவாள், அவனது மனைவியின் குறைபாடுகள் அவன் காதுகளில் என்றென்றும் ஒலிக்கும். அவளது பசிய கண்களின் கூரிய ஒளி மறையவே மறையாது. தனது இறந்துபோன குழந்தைகளை எண்ணி, தாய்மையுணர்ச்சியோடு உறுமிக்கொண்டிருக்கும் அவளது பழிவாங்கும் எண்ணம் அவள் உயிர் வாழ்கின்றவரையிலும் தீரவே தீராது.”

அவள் பினைப் பற்றியும் நினைத்துப் பார்த்தாள். அவனது ரத்தத்தை, அவனது முகத்தை, அவனது கனன்றெரியும் கண்களை, அவனது பேச்சையெல்லாம் நினைத்துப் பார்த்தாள். அந்த அகோரமான மிருகத்தனத்தை எண்ணி அவளது மனத்தில் நிர்க்கதியான நிலைமையின் கசப்புணர்ச்சி புகுந்து. அவளது இதயத்தைக் கசக்கி இறுக்கியது. நகருக்கு வந்துசேருகிறவரையிலும் வழியெல்லாம் அந்தக் காலைப்பொழுதின் மங்கிய பகைப்புவத்திலே மிகயீலின் உருவம்தான் அவள் சண்முன்னே உருவாகிக்கொண்டிருந்தது. அவனது கட்டு மஸ்தான. கரிய தாட்கொண்ட உருவத்தை. கந்தல் கந்தலாகக் கிழிந்த சட்டையோடும், பின்புறமாகக் கட்டிய கைகளோடும், பறட்டைத் தலையோடும் அவள் கண்டாள். எந்த உண்மைக்காக அவன் போராடுகிறானோ அதன்மீது கொண்ட நம்பிக்கையும், அது தாக்கப்படுவதால் எழுந்த கோபமும் நிறைந்து பொங்கும் மனிதனாக அவனைக் கண்டாள், பூமியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் எண்ணிறந்த கிராமங்களையும், அந்தக் கிராமங்களிலே நியாயத்தின் திக்விஜயத்தை வரவேற்க ரகசியமாகக் காத்திருக்கும் ஜனங்களையும், எந்தவித எதிர்ப்புமின்றி, எதிர்கால சுபிட்சத்தில் எவ்வித நம்பிக்கையுமின்றி அர்த்தமற்ற உழைப்பிலேயே தமது வாழ்நாளையெல்லாம் போக்கிவிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தையும் அவள் எண்ணிப் பார்த்தாள்.

குன்றுகள் பெருத்துக் கரடு முரடாக, உழவற்றுக் கிடக்கும் நிலத்தைப் போல், உழுபவனை எதிர்நோக்கி ஆர்வத்தோடும் மௌனத்தோடும் அங்காந்து காத்திருக்கும் தரிசி நிலம் போன்ற வாழ்க்கையை அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள்.

அந்தத் தரிசு நிலம் சுதந்திரமான, நேர்மை நிறைந்த மனிதர்களை நோக்கி, “என்மீது சத்தியத்தையும் அறிவையும் விதைத்துப் பயிராக்குங்கள்; நான் உங்களுக்கு உங்கள் உழைப்புக்கு நூறு மடங்காகப் பலன் அளிக்கிறேன்” என்று சொல்வது போலிருந்தது.