இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
166
அலையாப் பண்பும் அடிப்படைத் தேவை!
பட்டா ளத்தினர் கட்டிக் காத்திடும்
கெட்டிக் குணமே கட்டுப் பாடாம்!
இந்தப் படையினில் என்னை இணைத்திடும்
சிந்தனை மட்டும்என் சொந்த விருப்பம்;
செருமுனை சேர்ந்தபின் அருமைத் தலைவன்
தருமோர் ஆணையைத் தட்டாது கேட்டலே
முறையாம்; முயன்றும் முடியா விடிலோ
விரைவாய் உயிரை விடுதலே நெறியாம்!
இருப்பதோ ஓர்உயிர்; ஏகப் போவதும்
ஒருமுறை தான்; அஃது உயர்வாய்ப் போகலாம்!
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்!”
போற்றார் யார்இப் புனிதநன் மொழியை?
"எங்கிருந் தாலும் வாழ்க" என்பதும்
மங்காது "வாழ்க வசவாளர்” என்பதும்
எப்பொருள் யார், யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவென