எதிர்பாராத முத்தம்/பாடல் 13

விக்கிமூலம் இலிருந்து


13

இல்லையென்பான் தொல்லை.


பொன்முடி கடையி னின்று
வீட்டுக்குப் போகும் போது,
தன்னெதிர்ப் பண்டாரத்தைப்
பார்த்தனன் "தனியாய் எங்கே
சென்றனிர்" என்று கேட்டான்.
பண்டாரம் செப்பு கின்றான்:
"உன் தந்தை யாரும், நானும்
ஒன்றுமே பேசவில்லை
அவளுக்கும் உனக்கு முள்ள
அந்தரங் கத்தை யேனும்,
அவன் உள்ளை மரத்தில் கட்டி
அடித்ததை யேனும், காதற்
கவலையால் கடையை நீ தான்
கவனியா மையை யேனும்,
அவர் கேள்விப் படவே இல்லை
அதற் கவர் அழவு மில்லை.

நாளைக்கே அயலூர்க் குன்னை
அனுப்பிடும் நாட்டமில்லை;
கேளப்பா, தாடிச்சேதி
கேட்கவும் இல்லை" என்றன்.
ஆளனாம் பொன் முடிக்கோ
சந்தேகம் அதிக ரிக்கக்
கோளனாம் பண்டாரத்தின்
கொடுமையை வெறுத்துச் சென்றான்.