எதிர்பாராத முத்தம்/பாடல் 30

விக்கிமூலம் இலிருந்து


30

திருவடி சரணம்.


முழுதுநூல் அங்கேற்றிப் பின்
முடிமன்னன், குதிரை யானை,
பழுதிலாச் சிவிகை செம்பொன்
காணிக்கை பலவும் வைத்துத்
தொழுதனன், குருபரன் பின்,
துதிநூலும் நீதி நூலும்
எழுதிய அனைத்தும் தந்தே
சின்னாட்கள் இருந்து பின்னே,

தம்பியை இல்லம் போக்கித்,
தான், சிராப் பள்ளி யோடு
செம்மைசேர் ஆனைக் காகவும்
சென்று, பின் திருவா ரூரில்
பைம்புளற் பழனத் தாரூர்
நான்மணி மாலை பாடி
நம்மைவந் தடைந்த காலை
நாமொரு கேள்வி கேட்டோம்.

ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக், குணமொரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே யாக.
இந்துவாழ் துடையான் ஆடு மானந்த
எல்லையில், தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் தினைத்து,
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்;

ஆகுமித் திரு விருத்த
அனுபவப் பயனைக் கேட்க,
ஈகுவோன் கையி லொன்றும்
இல்லாமை போல் தவித்துத்,
தேகமும் நடுங்கி நின்று
திருவடி சரணம் என்றான்.
ஏகிப்பிள் வருக என்றோம்;
சிதம்பரம் ஏகி உள்ளான்.

சென்றஅக் குருபரன் தான்
திரும்பி வந்திடு மோர் நாளும்
இன்றுதான், சிறிது நேரம்
இருந்திடில் காணக் கூடும்"
என்றுதற் றேசிகர் தாம்
இருநாய்கள் மாருங் கேட்க
நன்றுற மொழிந்தார், கேட்ட
நாய்கன்மார் காத் திருந்தார்.