எதிர்பாராத முத்தம்/பாடல் 31

விக்கிமூலம் இலிருந்து


31

சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்

புள்ளிருக்கும் வேளூர் போய்ப்
புனைமுத்துக் குமரன் மீது

பிள்ளை நூல்பாடி, மன்றில்
பெம்மானை மும்மணிச் சொல்

தெள்ளுநீர் ஆட்டிப், பின்னும்
சிதம்பரச் செய்யுட் கோவை,

அம்மைக் கிரட்டை மாலை
அருளினான் இருனொன் றில்லான்

மூளும் அன்பாற் பண்டார
மும்மணிக் கோவை கொண்டு

ஆளுடை ஞானா சானின்
அடிமலர் தொழுது பாடி,

நீளுறப் பரிசாய்ப் பெற்ற
நெடுநிதி அனைத்தும் வைத்து,

மீளவும் தொழும் சீடன்பால்
விளம்புவான் ஞான மூர்த்தி;

“அப்பனே, இது கேள், இந்த
அரும்பொருள் அளைத்தும் கொண்டு

செப்பிடும் வடதா டேகிச்
சிவ தருமங்கள் செய்க!

அப்பாங்கில் உள்ளா ரெல்லாம்
அசைவர்கள், உயிர் வதைப்போர்;

தப்பிலாச் சைவம் சார்ந்தால்
அன்பிலே தழைத்து வாழ்வார்.

சைவநன் மடா லயங்கள்
தாபிக்க! கோயில் காண்க!

தைவார்க்குச் சிவ பிராளின்
தாமத்தால் உஉலாவு நல்கும்

சைவசத் திரங்கள் காண்க!
தடாகங்கள் பூந் தோட்டங்கள்

உய்வாக, உயிரி வேந்தன்
உவப்புறச் செய்து மீள்க!”

என்று தேசிகனார் சொல்லி
இனிதாக ஆசி கூறி,

நன்றெரு துறவு காட்டிக்
காவியும் நல்கி, ஆங்கே

"இன்னெடு வட தேசந்தான்
எம்பிரான் இருக்கை யாகித்,

தென்றமிழ் நாட்டினைப் போல்
சிறப்பெலாம் எய்த" என்றார்.

சமறைநாய்கள் மான நாய்கன்
வாய்மூடிக் காத்திருந்தார்

குறைவறு பரி சனங்கள்
கூட்டமாய்த் தொடர, அன்பால்

இறைவனாம் தேசிகன் தாள்
இறைஞ்சிய குரு பரன் தாள்,

யிறைஞடி தன்னைப் பாடிப்
பெருஞ் சிறப்போடு சென்றான்.