எதிர்பாராத முத்தம்/பாடல் 5

விக்கிமூலம் இலிருந்து


5


பண்டாரத் தூது


பசுவலன் உதிப்ப தன்முன்
பண்டாரம் பூக்கொணர்ந்தான்.

புகலுவான் அவனிடத்தில்
பொன்முடி: “ஐயா, நீவிர்

சகலர்க்கும் வீடுவீடாய்ப்
பூக்கட்டி, தருகின் றீர்கள் ;

மகரளீ தியிலே உள்ள
மறை நாய்கன் வீடும் உண்டோ ?

மறைநாய்கள் பெற்ற பெண்ணாள்,
மயில்போலும் சாயல் கொண்டாள்.

நிறை மதி மூகத்தாள்; கண்கள்
நீலம் போல் பூத்திருக்கும்;

பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்;
பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பான்;

அறையும் அவ் வணங்கை நீவிர்
அறிவீரா? அறிவீராயின்,

சேதியொன் றுரைப்பேன் யார்க்கும்
தெரியாமல் அதனை, அந்தக்

கோதைபால் நீனீர் சென்று
கூறிட ஒப்பு வீரா ?

காதை என் முகத்தில் சாய்ப்பீர்!
கையினில் வராகன் பத்துப்

போதுதுமா ?” என்று மெல்லப்
பொன்முடி புலம்பிக் கேட்டான்!

”உன் மாமன் மறைநாய்கள் தான் !
அவன் மகள் ஒருத்தி உண்டு;

தென்னம் பானை பிளந்து
சிந்திடும் சிரிப்புக் காரி !

இன்னும் கேள் அடையானத்தை;
இடை, வஞ்சிக் கொடிபோல் அச்சம் !

நன்றாகத் தெரியும் ! நானும்
பூ அளிப்பதும் உண்” டென்றான்.

”அப்பாவும் மாம னாகும்
பூனையும் எலியும் ஆவார்;

அப்பெண்ணும் நானும் மெய்யாய்
ஆவியும் உடலும் ஆனோம்!

செப்பேத்தி அவள் துறைக்குச்
செல்லுங்கால்,சென்று காண

ஒப்பினேன் ! கடைக்குப் போக
உத்தர வீட்டார் தந்தை !

இமைநோக என்னை நோக்கி
இருப்பாள் கண் திருப்ப மாட்டாள்!

சுமைக்குடம் தூக்கி அந்தச்
சுடர்க்கொடி காத்திருந்தால்,

'நமக் கென்ன என் றிருத்தல்
ஞாயமா? நீவிர் சென்றே

அமைவில் என் அசந்தர்ப்பத்தை
அவளிடம் நன்றாய்ச் சொல்லி

சந்திக்க வேறு நேரம்
தயவு செய் துரைக்கக் கேட்டு

வந்திட்டால் போதும்! என்னைக்
கடையிலே வந்து பாரும்!

சிந்தையில் தெரிவாள்; கையால்
தீண்டுங்கால் உருவம் மாறி

அந்தரம் மறைவாள்; கூவி
அழும்போதும் அதையே செய்வாள்.

வையத்தில் ஆண்டு நூறு
வாழ நான் எண்ணினாலும்

தையலை இராத்தி ரிக்குள்
சந்திக்க வில்லை யானால்,

மெய்யெங்கே? உயிர்தா னெங்கே?
வெடுக்கென்று பிரிந்து போகும்?

“உய்யவா? ஒழியவா ?” என்
றுசாவியே வருவீர் என்றான் !

பண்டாரம் ஒப்பிச் சென்றான்
பொன்முடி பரிவாய்ப் பின்னும்

கண்டபூங் கோதை யென்னும்
கவிதையே நினைப்பாய், அன்னாள்

தண்டைக்கால் நடை நினைந்து
தான் அதுபோல் நடந்தும்,

ஒண்டொடி சிரிப்பை எண்ணி
உதடு பூத்தும் கிடப்பான்!

வலிய அங் கணைத்த தெண்ணி
மகிழ்வான்! அப்போது கீழ்ப்பால்

ஒலி கடல் நீலப் பெட்டி
உடைத்தெழுந்தது கதிர் தான் !

பல பல என விடிந்த
படியினால், வழக்க மாகப்

புலம் நோக்கிப் பசுக்கள் போகப்
பொன்முடி கடைக்குப் போனான்!