தந்தையும் மகளும்/149

விக்கிமூலம் இலிருந்து


149அப்பா! மழை காலத்தில் உப்பும் சீனியும் கட்டியாக ஆகிவிடுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! உப்பும் சீனியும் தண்ணீரில் எளிதில் கரையக்கூடியவை என்பதை நீ அறிவாய். மழை காலத்தில் காற்றில் நீராவி நிறைந்திருக்கும். அந்த ஆவி உப்பிலோ சீனியிலோ பட்டதும் குளிர்ந்து தண்ணீர்த் துளிகள் சேர்ந்த உப்பும் சீனியும் தனித்தனிப் பரல்களாக இராமல் ஒன்று சேர்ந்து கட்டியாக ஆகிவிடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/149&oldid=1538413" இலிருந்து மீள்விக்கப்பட்டது