தந்தையும் மகளும்/163

விக்கிமூலம் இலிருந்து


163 அப்பா! எந்தத் திசையிலிருந்து சத்தம் கேட்கிறது என்பதை நம்மைவிட மிருகங்கள் எளிதில் தெரிந்து கொள்ளுமாமே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அது உண்மைதான். நமக்கு நம்முடைய காதுகளை விரிக்கவும் முடியாது, திருப்பவும் முடியாது. தலையைத்தான் திருப்ப முடியும். அதனால் சப்தம்எந்தத் திசையிலிருந்து வருகிறது என்பதை நாம் நம் தலை முழுவதையும் திருப்பியே அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது,

ஆனால் மிருகங்களோ காதுகளை விரிக்கவும் முடியும். திருப்பவும் முடியும். அதனால் காதுகளை விரித்து சப்தம் முழுவதையும் சேகரித்துக் கொள்கின்றன காதுகளைத் திருப்பி சப்தம் வரும் திசையை அறிந்து கொள்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/163&oldid=1538471" இலிருந்து மீள்விக்கப்பட்டது