தந்தையும் மகளும்/177

விக்கிமூலம் இலிருந்து


177அப்பா! குதிரைக்கு மட்டும் விரல்கள் இல்லையே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! ஆதியில் சகல மிருகங்களுக்கும் விரல்கள் இருக்கவே செய்தன. அவைகள் எல்லாம் நம்மைப்போல் பாதம் முழுவதையும் ஊன்றியே நடந்து கொண்டிருந்தன. ஆனால் பிற மிருகங்கள் தாக்க வந்தால் அதிக வேகமாக ஓடினால் தானே தப்பிப் பிழைக்க முடியும்? அதிக வேகமாக ஓடும் போது நம்முடைய குதிங்கால்கள் தரையில் படுவதில்லை. நம்முடைய விரல்களையே ஊன்றி ஓடுகிறோம். அவ்வாறே அக்காலத்தில் பல மிருகங்கள் விரல்களை ஊன்றி ஓடி உயிர் பிழைத்து வந்தன.

குதிரை அத்தகைய மிருகங்களில் ஒன்று,ஆதியில் அது ஒரு பூனையளவாகவே இருந்தது. அப்பொழுது அதன் காலில் ஐந்து விரல்கள் இருந்தன. ஆனால் அது எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகக் குதிங்காலை ன்றாமல் விரல்களை மட்டுமே ஊன்றி ஓடி வந்தபடியால் அதன் உடல் அமைப்பு நாளடைவில் சிறிது சிறிதாக மாறி இப்பொழுதுள்ள உருவத்தை அடைந்துவிட்டது. காலில் இருந்த நான்கு விரல்களுள் மூன்று விரல்கள் குறுகிக் குறுகிக் கடைசியில் தேய்ந்து விட்டன. ஒரே ஒரு விரல் மட்டும் எஞ்சியுள்ளது. எதைத் தான் நாம் இப்பொழுது குதிரையின் குளம்பு என்று கூறுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/177&oldid=1538632" இலிருந்து மீள்விக்கப்பட்டது