தந்தையும் மகளும்/49

விக்கிமூலம் இலிருந்து


49அப்பா! ஐஸ் கட்டியைக்கொண்டு நெருப்பு உண்டாக்கி விடலாம் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! தண்ணீரைக்கொண்டு நெருப்பை அணைக்கத்தான் முடியும். உண்டாக்கமுடியாது அப்படியிருக்கத் தண்ணீரிலும் பன்மடங்கு அதிகக் குளிரான பனிக்கட்டியைக் கொண்டு நெருப்பு உண்டாக்குவது எப்படி?

அம்மா? நீ லென்ஸ் என்னும் வளைந்த கண்ணாடி பார்த்திருக்கிறாயா? அண்ணன் ஒரு சிறு கண்ணாடிமூலம் சிறிய எழுத்துக்களைப் பெரிய எழுத்துக்கள்போல் உனக்குத் தெரியும்படி செய்தானே, அத்தகைய கண்ணாடிதான் லென்ஸ் என்பது, அது இரு பக்கமும் வெளியே வளைந்ததாக இருக்கும்.

சாதாரணமாக தட்டையாயருக்கும் கண்ணாடியில் ஒளிபட்டால் அதன் கதிர்கள் அப்படியே உள்ளே நேராகச் செல்லும். ஆனால் வளைந்த கண்ணாடியாகிய லென்ஸ் வழியாகச் சென்றால் ஒளிக்கதிர்கள் நேராகச் செல்லாமல் சாய்ந்து சென்று ஓரிடத்தில் ஒன்றாகச் சேரும். அக்கதிர்கள் தனித்தனியாக இருக்கும்போது. அவை நமக்கு அதிகச் சூடாகத் தெரியாது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்தால் நெருப்புப்போல் ஆய்விடும். அவை ஒன்றாகச் சேருமிடத்தில் ஒரு கடுதாசியைவைத்தால், அந்தக் கடுதாசியில் தீப்பற்றிக் கொள்ளும்.

பனிக்கட்டி மிகவும் குளிர்ந்த வஸ்துதான். அது நெருப்பை அணைத்து விடவே செய்யும், ஆயினும் அதையும் லென்ஸ்போல் மெல்லியதாகச் செய்து சூரிய வெளிச்சத்தில் பிடித்தால் அப்பொழுதும் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பனிக்கட்டி வழியாகச் சென்று கடுதாசியில் தீப்பற்றும்படிச் செய்துவிடும். பனிக்கட்டி தவிர வேறு எதுவும் கிடையாத துருவப் பிரதேசத்துக்குச் செல்பவர் தீக்குச்சி தீர்ந்து போனால் இவ்விதமே நெருப்பு உண்டாக்கிக் கொள்வார்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/49&oldid=1538152" இலிருந்து மீள்விக்கப்பட்டது