திருவாசகம்

Wikisource இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

படிப்பதற்கு ஏதுவாக இருக்க பின்வரும் பக்கங்களில் தலைப்புகளுக்கு உரிய பக்கங்களை காணலாம்.

சிவ புராணம்

திருப்பள்ளியெழுச்சி

பொருளடக்கம்

[தொகு] சிவ புராணம்

நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க!

புறத்தார்க்கு சேயோந்தன் பூங்கழல்கள் வெல்க!

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி!

தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி!

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

சிவன் அவனென் சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன்தாள் வணங்கி

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் !

கண்ணுதலான் தன்கருணை கண் காட்ட வந்தெய்தி

என்னுதற்கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்

புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி

பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி

கல்லா மனிதராய் பேயாய் கனங்களாய்

வல்லசுரராகி முனிவராய் தேவராய்

செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

வெய்யாய் தனியாய் இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே

கரந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போல

சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை

அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்தெங்கும் புழு அழுக்கு மூடி

மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்கு

கலந்து அன்பாகி கசிந்துள் உருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி

நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதியே மலர்ந்த மலர் சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரானே

பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே

நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெரும் கருணை பேராறே

ஆராஅமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக் குடம்பின் உட்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

[தொகு] கீர்த்தித் திரு அகவல்

(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

தில்லை மூதூர் ஆடிய திருவடி

பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி

எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி

மண்ணும் விண்ணும் வானோர் உலகும்

துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்

என்னுடை இருளை ஏறத்துரந்தும்

அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்

குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்

மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்

கல்லா டத்துக் கலந்து இனிது அருளி

நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்

பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்

எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்

விராவு கொங்கை நல்தடம் படிந்தும்

கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்

மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்

மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து

உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும்

நந்தம் பாடியில் நான் மறையோனாய்

அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்

வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்

நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி

ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக்

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்

குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக்

சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்

வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்

கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்

தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்

வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்

மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி

சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்

ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி

பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று

ஈண்டு கனகம் இசையப் பெறா அது

ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத்

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்

அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி

இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்

மதுரைப் பெருநல் மாநகர் இருந்து

குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்

ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்

பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்

உத்தர கோச மங்கையுள் இருந்து

வித்தக வேடங் காட்டிய இயல்பும்

பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்

தூவண மேனி காட்டிய தொன்மையும்

வாத வூரினில் வந்து இனிது அருளிப்

பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்

திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக்

கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்

பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்

பாவம் நாசம் ஆக்கிய பரிசும்

தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து

நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்

விருந்தினன் ஆகி வெண்காடு அதனில்

குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்

பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு

அட்ட மாசித்தி அருளிய அதுவும்

வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு

காடு அது தன்னில் கரந்த கள்ளமும்

மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு

தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்

ஓரி ஊரில் உகந்து இனிது அருளி

பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்

[தொகு] திருவண்டப் பகுதி

அண்டைப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கொடியின் மேற்பட்ட விரிந்தன

[தொகு] போற்றித் திருவகவல்

[தொகு] திருச்சதகம்

[தொகு] காருணியத்து இரங்கல்

[தொகு] ஆனந்தத்து அழுந்தல்

[தொகு] ஆனந்த பரவசம்

[தொகு] ஆனந்தாதீதம்

[தொகு] நீத்தல் விண்ணப்பம்

[தொகு] திருவெம்பாவை

[தொகு] திருவம்மானை

[தொகு] திருப்பொற்சுண்ணம்

[தொகு] திருக்கோத்தும்பி

[தொகு] திருத்தெள்ளேணம்

(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை

உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.


திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்

கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை

அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும்

திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.


அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்

தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை

உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம்

சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ.


அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே

பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி

நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து

சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.


அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்

உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்

கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த

திருவந்த வாபாடிக் தெள்ளேணங் கொட்டாமோ.


அரையாடு நாகம் அசைத்தபின் அவனியின்மேல்

வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்

உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்

திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.


ஆவா அரிஅயன்இந்திரன் வானோர்க் கரியசிவன்

வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித்தாண்டுகொண்டான்

பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே

தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.


கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்

அறம்பாவ மென்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்

மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத்

திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.


கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால்

பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி

மின்னோர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்

தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ.


கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்

புனவே யனவளைத் தோளியோடும் புகுந்தருளி

நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்

சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ.


கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே

அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியினமேல்

மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய

செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.


முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட

அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு

பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி

தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.


பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்

ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட

நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்

சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.


மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே

நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன்

பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவாகத்தால்

சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ.


உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு

பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை

மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியாம்

திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.


புத்தன் பரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும்

பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த

அத்தன் அணிதில்லை அம்பலவண் அருட்கழல்கள்

சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ.


உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும்

கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும்

செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.


வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும்

தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு

ஊன்கெட் டுயிர்கெட்டுணவுகெட்டென் உள்ளமும்போய்

நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.


விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து

மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்

கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித்

தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ.


குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள்

நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்

அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.


திருச்சிற்றம்பலம்

[தொகு] திருச்சாழல்

[தொகு] திருப்பூவல்லி

[தொகு] திருவுந்தியார்

[தொகு] திருத்தோள் நோக்கம்

[தொகு] திருப்பொன்னூசல்

[தொகு] அன்னைப்பத்து

[தொகு] குயிற்பத்து

[தொகு] திருத்தசாங்கம்

[தொகு] திருப்பள்ளியெழுச்சி

போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே!

புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு

ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

ஏற்றுயர் கொடியுடையாய்! எமை உடையாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !


அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய்

அகன்றது; உதயம் நின் மாலர் திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக்

கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்

திரள் நிரை அறுபதம் முரள்வன ;இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே!

அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!


கூவின பூங்குயில்;கூவின கோழி;

குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;

ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து

ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்

தேவ! நற் செறிகழற் றாளினை காட்டாய்;

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்!

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்;

தொழுகயர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !


"பூதங்கள் தோறுனின்றாய்! "எனின் அல்லால்

"போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்

சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!

சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !


பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார்

பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்

வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!

செப்புறு கமலங்கள் மலருந்தண்வயல் சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !


அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

அரிதென எளிதென அமரரும் அறியார் ;

இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்

மதுவளர் பொழில்திரு உத்தரகோச

மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்;

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்!

மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?

பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்

பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்

திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்!

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே

வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்

எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !


புவணியிற் போய் பிறவாமையின் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்!

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!

[தொகு] கோயில் மூத்த திருப்பதிகம்

[தொகு] கோயில் திருப் பதிகம்

[தொகு] செத்திலாப் பத்து

[தொகு] அடைக்கலப்பத்து

[தொகு] ஆசைப்பத்து

[தொகு] அதிசயப்பத்து

[தொகு] புணர்ச்சிப் பத்து

[தொகு] வாழாப் பத்து

[தொகு] அருட்பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


சோதியே சுடரே சூழொளி விளக்கே

சுரிசூழற் பணைமுலை மடந்தை

பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய்

பங்கயத் தயனுமா லறியா

நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்

நிறைமலர்க் குருந்தமே வியசீர்

ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என் றரு ளாயே.


நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்

கண்ணனே விண்ணுளோர் பிரானே

ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி

உலகெலாந் தேடியுந் காணேன்

திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே.


எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா

ஏலவார் குழலிமார் இருவர்

தங்கள் நாயகனே தக்கநற்காமன்

தனதுடல் தழலெழ விழித்த

செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றருளாயே.


கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்

கண்ணனும் நண்ணுதற்கரிய

விமலனே எமக்கு வெளிப்படா யென்ன

வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்

திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே.


துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை

துணைமுலைக் கண்கள்தோய் சுவடு

பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு

பொங்கொளி தங்குமார் பின்னே

செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே.


துப்பனே தூயாய் தூயவெண்ணீறு

துதைந்தெழு துளங்கொளி வயிரத்

தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்

உறுசுவை துளிக்கும் ஆரமுதே

செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே.


மெய்யனே விகிர்தா மேருவே வில்லா

மேலவர் புரங்கள் மூன்றெரித்த

கையனே காலாற் காலனைத் காய்ந்த

கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்

செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே.


முத்தனே முதல்வா முக்கணா முனிவா

மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்

பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்

பரகதி கொடுத்தருள் செய்யுஞ்

சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே.


மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி

மறுமையோ டிம்மையுங் கெடுத்த

பொருளணே புனிதா பொங்குவா ளரவங்

கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்

தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே.


திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்

டென்னுடை யெம்பிரான் என்றென்

றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்

அலைகடல் அதனுளே நின்று

பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்

போதராய் என்றளு ளாயே.


திருச்சிற்றம்பலம்

[தொகு] திருக்கழுக் குன்றப் பதிகம்

(திருக்கழுக்குன்றத்தில் அருளியது -

ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்

கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்

உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்

கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.


பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே

சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்

சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்

கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.


மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை

விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்

இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே

கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.


பூணொணாததோரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றவும்

நாணொணாததோர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்

பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்

காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.


கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே

சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி

ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்

காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.


பேதம் இல்லதோர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே

ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்

சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்

காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.


இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே

மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்

துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனைக்

கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.


திருச்சிற்றம்பலம்

[தொகு] கண்ட பத்து

[தொகு] பிரார்த்தனைப் பத்து

[தொகு] குழைத்த பத்து

குழைத்தால், பண்டைக் கொடு வினை, நோய், காவாய்; உடையாய்! கொடு வினையேன்

உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்;

பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? 'பிறை சேர் சடையாய்! முறையோ?' என்று

அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே


அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்;

கொடி ஏர் இடையாள் கூறா, எம் கோவே, `ஆ! ஆ!' என்று அருளி,

செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா!

உடையாய்! கூவிப் பணி கொள்ளாது, ஒறுத்தால், ஒன்றும் போதுமே?


ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை,

இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே!

குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே, நீ கொண்டால்,

என் தான் கெட்டது? இரங்கிடாய்; எண் தோள், முக் கண், எம்மானே!


மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்

ஊனே புக, என் தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்;

ஆனால், அடியேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து,

கோனே! கூவிக்கொள்ளும் நாள் என்று? என்று, உன்னைக் கூறுவதே?


கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ!

தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ!

வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின்,

தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ?


வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!

வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;

வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?


அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,

குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?

இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!

நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?


நாயின் கடை ஆம் நாயேனை நயந்து, நீயே ஆட்கொண்டாய்;

மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி,

ஆயக் கடவேன், நானோ தான்? என்னதோ, இங்கு, அதிகாரம்?

காயத்து இடுவாய்; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய்; கண் நுதலே!


கண் ஆர் நுதலோய்! கழல் இணைகள் கண்டேன், கண்கள் களி கூர;

எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும்இது அல்லால்

மண்மேல் யாக்கை விடும் ஆறும், வந்து, உன் கழற்கே புகும் ஆறும்

அண்ணா! எண்ணக் கடவேனோ? அடிமை சால அழகு உடைத்தே!


அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்; உடையானே!

திகழா நின்ற திருமேனி காட்டி, என்னைப் பணிகொண்டாய்;

புகழே பெரிய பதம் எனக்கு, புராண! நீ, தந்தருளாதே,

குழகா, கோல மறையோனே, கோனே, என்னைக் குழைத்தாயே!


திருச்சிற்றம்பலம்

[தொகு] உயிருண்ணிப் பத்து

[தொகு] அச்சப் பத்து

[தொகு] திருப்பாண்டிப் பதிகம்

[தொகு] பிடித்த பத்து

[தொகு] திருவேசறவு

[தொகு] திருப்புலம்பல்

[தொகு] குலாப்பத்து

[தொகு] அற்புதப் பத்து

[தொகு] சென்னிப் பத்து

[தொகு] திருவார்த்தை

[தொகு] எண்ணப் பதிகம்

[தொகு] யாத்திரைப் பத்து

[தொகு] திருப்படை எழுச்சி

[தொகு] திருவெண்பா

[தொகு] பண்டாய நான்மறை

[தொகு] திருப்படையாட்சி

[தொகு] ஆனந்த மாலை

(தில்லையில் அருளியது - சிவானுபவ விருத்தம் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்

பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்

கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த

என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே.


என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்

உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்

பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா

தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே.


சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்

தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை

மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்

கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே.


கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய்

படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே

கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே

நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே.


தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்

நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே

தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே

நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.


கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே

ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்

சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ

தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.


நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்

பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்

அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே

தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே.


திருச்சிற்றம்பலம்

[தொகு] அச்சோ பதிகம்

(தில்லையில் அருளியது)


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்

சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்

குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு

அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே

மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்

தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்

ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை

எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்

சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்

அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே.


பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு

நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்

உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று

அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே.


வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்

கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்

பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து

அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்

பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி

உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை

ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்

காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை

மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்

ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை

மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்

நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த

அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்

அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ

ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை

அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.


படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்

குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்

நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா

அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.


பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி

வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை

சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட

ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.


திருச்சிற்றம்பலம்

"http://ta.wikisource.org/w/index.php?title=திருவாசகம்&oldid=15079" இருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி