தேவாரம்

விக்கிமூலம் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தேவாரம் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூன்று இறையடியார்களால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.


10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்துப், பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு சைவத் திருமுறைகளாகத் தொகுத்தார். இதில் முதலேழு திருமுறைகளும் தேவாரங்களாகும். இவற்றின் விபரங்கள் பின்வருமாறு.

திருமுறை பாடியவர் பாடல் எண்ணிக்கை
முதலாம் திருமுறை திருஞானசம்பந்த நாயனார் 1469
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்த நாயனார் 1331
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்த நாயனார் 1346
நான்காம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1060
ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1015
ஆறாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 980
ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் 1026
மொத்தம் 8227

வெளியிணைப்புகள் [தொகு]

அனைத்து தேவாரப் பதிகங்கள் மற்றும் பிற திருமுறைப் பாடல்களையும் கீழ்கண்ட உரலியில் காணலாம்.- தேவாரம் தளம் ( பன்னிரு திருமுறைகள் - தேவாரம் உள்ளடங்கியது)

http://www.THEVAARAM.org/ta/index.php

"http://ta.wikisource.org/w/index.php?title=தேவாரம்&oldid=17261" இருந்து மீள்விக்கப்பட்டது