இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
67
விடுமுறையை விணாகக் கழிக்கா வண்ணம்
விரைந்திட்டார் மாணவர்கள் ஈரோட்டுக்கே!
கடுமுயற்சி மேற்கொண்டே-உணவும், தங்கக்
கனிவாக உறையுளுமே அளித்தார் தந்தை;
இடும் உரையை ஏந்துதற்கும், அண்ணா தந்த
ஈடற்ற சொற்பொழிவைச் செவிம டுத்துக்,
கெடுமுறையைப் புரிந்துகொண்டு திராவி டர்கள்
கீழ்நிலையை மாற்றுதற்கும் துணிவு கொண்டார்!
நெடுஞ்செழியன்-பெயர்க்கேற்ற உயர்ந்த தோற்றம்: :நீண்டதொரு கருந்தாடி, நெடிய சட்டை!
கடுமையுடன் அன்பழகன் பேச்சி ருக்கும்:
காற்றடித்தால் பறக்கின்ற மெலிந்த மேனி!
கொடுமைதான்-மதியழகன் உருவம் குள்ளம்:
கோடையிடி போற்குமுறும் குரலோ ஓங்கும்:
தொடுமுன்னர் ஒட்டுகின்ற கரிய தேகம்:
துணிச்சலுள்ள இளம்வழுதி! இவர்க ளோடே