பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


அழைக்கப்பட்ட ம.பொ. சிவஞானமும் இதே நிறுவனத்தில் அச்சுக்கோர்க்கும் அணியில் வேலை செய்தவர் ஆவார்.

என்.வி. நடராசன் அவர்கள் ‘திராவிடன்’ என்ற வார இதழை தி.மு.கழகத்தின் கொள்கைப் பிரச்சாரப் பத்திரிகையாக நடத்திட, அறிஞர் அண்ணா அவர்கள் சந்திரமோகன் நாடகத்தை சென்னை ஒற்றைவாடை நாடக அரங்கில் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். உடனே என்.வி.என். பத்திரிகையைத் துவக்கி எழுச்சியூட்டும் கட்டுரைகளை எளிய தமிழ் நடையிலே எழுதி திராவிடரியக்கக் கொள்கைகளைப் பரப்பினார்.

இந்தப் புத்தகத்தை எழுதிய புலவர் என்.வி. கலைமணி 1950-ஆம் ஆண்டில் ‘திராவிடன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றியவர் ஆவார்.

அப்போது மத்திய அரசின் அஞ்சல் துறை, தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்களுக்கு, கழகத் தீர்மானத்திற்கேற்ப சென்னையில், இன்றையைக் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக இருக்கும் சத்தியமூர்த்தி பவன், அன்றைய இந்திய தேசிய ராணுவத் திடல் என்று (I.N.A. திடல்) அழைக்கப்பட்ட இடத்தில் புலவர் என்.வி. கலைமணி 6.4.52 அன்று தன்னந்தனி இளைஞனாய் திடலுக்குள் சென்று, ஜெகஜீவன்ராம் அவர்கள் ஸ்பென்சர் தொழிலாளர் விழாவில் பேசி முடித்த பின்பு, கறுப்புக் கொடியை கையின் கொடுத்து இரண்டு வாரம் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும். சென்னை சிறையில் இவர் அடைக்கப்பட்ட இந்த சம்பவச் செய்தி T.M. பார்த்தசாரதியால் நடத்தப்பட்ட ‘மாலை மணி’ நாளேட்டிலும், ‘சிறை மாளிகையில்’ என்று தலைப்பிட்டு அறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய ‘திராவிட நாடு’ வார இதழிலும் வெளி வந்துள்ளது.

‘திராவிடன்’ வார இதழை நடத்திய திரு. என்.வி. நடராசன் அவர்கள் கழகத் தீர்மானத்தின்படி சென்னை குன்றத்தூர் நகரில் 144 தடைச் சட்டத்தை மீறியபோது துப்பாக்கி பிரயோகத்தை ஆட்சியால் நடத்தப்பட்டக் கொடுமைகளுக்கு அஞ்சாமல் கைதாகி, பூவிருந்தவல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.