221
"அறிவுள்ள பொருள்கள் என்றும் பேதைமை யான பொருள்கள் என்றும் எட்டுரியக்கலை பற்றியும் புத்தமதக் கலைப்பற்றியும் நான் கூறியதை நினைவூட் டிக்கொள். நான் கலையை நேசிக்கிறேன், ஆமாம். ஆனல் உன் முன்னிலையில் நான் உயிர்வாழத் தொடங்குகிறேன். மீண்டும் உன்னுடன் நான் இருக்கத் தொடங்கியதிலிருந்துதான் நான் மெய் யாகவே உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணரு கிறேன்”
இன்னும் கூடுதலாகச் செவிமடுக்கவேண்டு மென்ற ஆவலில், 'ஏன்?" என்று கேட்டாள் அவள். 'பீங்காளுலானக்வானினுக்கும், ச ைத யு ம் ரத்தமும் கொண்டு ஜீவித்திற்கும் க்வானினுக்கும் உள்ள வேறுபாட்டை நீ அறிவாய். என் இதயத்தை நான் உணர்கிறேன்.”
"என் இதயத்தையும் உணருகிறீர்களா?” ஜேம்ஸ் அவளுடைய மார்பைத்தொட்டான். அவன் கைபட்டதும், ஈஸ் மகிழ்ச்சியினுல் பூரித்துப் போளுள். -
'ஜேம்ஸ் ஜேம்ஸ்' என்று நெடுமூச் செறிந்தாள். -
"என்னுடைய இதயத்தின் மாணிக்கமே!’ என்று ஜேம்ஸ் முணுமுணுத்தான். அப்பால், ”வோட்டிஷிங்கன்! வோட்டிரோவ்! என்னுடைய உள்ளமும் உடலும் ஆனவளே!” என்ருன். அந்தப் பதம், மிகமிக நெருங்கிய உறவின் தருணங்களில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டது என்பதை ஜேம்ஸ் அறியான்,