291
'யாராகிலும் அங்கு இருந்தார்களா?” "ஊஹாடும். சற்று நேரம் காத்திருந்தேன்; பிறகு இளம்பிவிட்டேன்.”
"அப்புறம் நீ என்ன செய்தாய்?’ என்று விசா ரித்தான் ஃபான்.
"நான் ராணுவ வீரர்களுடன் பேசினேன். லெய்வா எனக்கு நிறைய பணம் கொடுத்திருந்தாள்; ஆகவே உணவு விடுதியில் திருப்தியாகச் சாப்பிட் டேன்; பஸ் நிலையத்துக்குப் போவதற்குரிய நேரத் துக்காகக் காத்திருந்தேன் நான். ஊரடங்குச் சட் டம்பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் அனுமதிச் சீட்டு இல்லாமல் என்னை எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்கவில்லை. என்னுடைய உத்தியோகச் சின்னத்தைக் காட்டினேன்; ஆனால், அதனல் பலன் கிட்டவில்லை; நான் வெளியேற அவர்கள் அனுமதிக்க வில்லை; அவ்வளவு அவசரமாக லுங்காங் நீ ஏன் செல்ல வேண்டும்?” என்றும் அவர்கள் கேட்டார் கள். நான் நம்பிக்கை இழந்திருந்தேன், சரி...சரி என்று சொல்லித் திரும்பிவிட்டேன்.”
அவன் நடந்த கதையைச் சொல்லிக் கொண் டிருந்த விதம் அவன் அதை மிகவும் ரசித்தான் என்ப தைக் காட்டியது. -
"அப்புறம் என்ன நடந்தது?’ என்று கேள்வி கேட்டான் ஃபான். - - - “என்ன நடந்தது?....எனக்குப் போவதற்கு வேறு இடமில்லை, என் சொந்த ஊருக்கும் திரும்பிச் செல்ல நான் விரும்பவில்லை. ஆகவே நீங்கள் யாரா வது திரும்பியிருக்கக் கூடுமென்று லெய்வாவின்