34? தான் தனிமையில் மாட்டிக்கொண்டு விட்டதை அவன் உணர்ந்தான். குடியானவன் ஒருவன் அவனது கால்களைக் குறிவைத்து தடியை வீசி அடித்து அவனை நிலைகுலையச் செய்ய முயன்ருன். இவையாவும் வெகு துரிதமாக நடந்துவிட்டன. டெங் மூர்க்கத்தனமாக மேலே இருந்து தேய்ந்த பாதையில் குதித்தான்; விழுந்த வேகத்தில் அவன் அதன் விளிம்புக்கு உருண்டு வந்துவிட்டான். வேறு வழியின்றி அவன் கரங்கள் அதன் முனையை கெட்டி யாகப் பற்றின. - யாரோ அவனுடைய கைவிரல்களை நசுக்கினர் கள். அவன் விழுந்திருந்தால்-அவனுடைய கோட்' சுமார் முப்பதடி கீழே யிருந்த மரக்கிளையில் சிக்காம விருந்தால்-அவன் செங்குத்தாக நூற்றைம்பதடி கீழேயிருந்த பாறையில் விழுந்து அடிபட்டிருப்பான். அந்தப் பயங்கரக் காட்சியைக் காணச் சகிக் காது ஈஸ் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். இந்த நிலையில் அவன் துடித்து ஊசலாடிக் கொண்டிருந்தான்; அவனுடைய கைகள் பிடிப் பற்றுத் துவண்டன. அவனது கால்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. உழவர்கள் திகைப்படைந்தார்கள். அவர்களில் ஒருவன் அவன் மீது கல்லை வீச இருந்தான்; ஆனல் மற்றவர்கள் "வேண்டாம்! அவனை விட்டுவிடுங்கள்!” என்று கத்தினர்கள். அக்காட்சியைக் கண்டு ஜேம்ஸ் சிலையானன். இதைவிட கோரமான காட்சியை அவர்கள் கண் டிருக்க முடியாது.