490
னர் என்று அவர்கள் சொல்லுகிற அந்த அளவில் நான் ஒருபோதும் இருந்தது கிடையாது. கொள் கைகள் சம்பந்தப்பட்ட விவாதங்கள் ஒன்றிலே ஒருவன் வயதுக்கு வந்த பிறகு தான் தக்காளி சாப் பிடுவதா அல்லது முட்டைகோஸ் சாப்பிடுவதா என்பதைத் தானே தீர்மானிப்பதற்கு அவளுல் முடி யுமாவென்று நான் சேட்டேன். தனி மனிதனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த குட்டி பூர்ஷவா என்று ஆரவாரம் செய்து என்னை உட்கார வைத்து விட்டார்கள். ஆதலால் நான் சுறுசுறுப்பு அற்ற உறுப்பின'கை ஆகிவிட்டேன்!...”
கபில நிறமும் சுருக்கம் விழுந்த முசமும் கொண்ட ஒர் உழவன் நிதானமாகச் சொன்னன்; 'எனக்கு ஒரு சிறு துண்டு நிலம் கொடுங்கள்; அந்தக் கமிஷனர்கள் எல்லோரையும்விட நல்ல முறையில் நான் முட்டைகோசு பயிரிட முடியும்.”
'சரி, நீங்கள் முட்டைக்கோசு பயிரிடுங்கள்.
நான் உங்களுக்காக அவைகளை விற்பனை செய் கிறேன்” என்ருன் இளைஞன். -
“எது நல்லதென்று உங்களுக்குத் தெரிவதில்லை” என்று மணியோசை போன்ற புதிய குரலில் ஒன்று கிளம்பியது. பேசியவனுக்கு சுமார் நாற்பது வயது இருக்கும். 'மாட்டிறைச்சிச் சவ்வுகள், முட்டைகள் சேர்ந்த உயர்ந்த மாவுப்பணியாரம் சூப்பு இவைகளை டாம்ஷநியில் என் வாழ்நாள் பூராவும் தயாரித்து விற்பனை செய்திருக்கிறேன். அதையே ஹாங் காங்கிலும் செய்யப்போகிறேன். மண்ணுலான அடுப் பும் குழிந்த வாணலியும்தான் எனக்குத் தேவை!"