அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்
13
1924, செப். 18. கோஹத்தில் ஹிந்து--முஸ்லிம் கலவரத்தை நிறுத்த டில்லியில் 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
1932, செப். 20. மாக்டொனால்டு வகுப்புத் தீர்ப்பை எதிர்த்து எர்ரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். செப்டம்பர் 16- தேதி சர்க்கார் அனுப்பிய அறிக்கை கண்டு திருப்தியடைந்து உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.
1933, மே 8. தம்மை பரிசுத்தமாக்கிக்கொள்ள காந்திஜி எர்ரவாடா சிறையில் 2 நாள் உபவாசமிருந்தார். அதே தினம் சர்க்கார் அவரை விடுதலை செய்தனர். பூனாவிலுள்ள பர்ணகுடியில் உபவாசம் முடிந்தது.
1943, பிப். 10--ஆகாகான் அரண்மனையில் 3 வார உண்ணாவிரதமிருந்தார்.
1947, செப் 1--கல்கத்தாவாசிகள் நிதானமடையும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். செப்டம்பர் 4-ந் தேதியன்று கல்கத்தாவில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகத் தலைவர்கள் கூறியதன்மீது உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
1948, ஜன. 13 புது டில்லியில் வகுப்பு ஒற்றுமையை ஏற்படுத்த, சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். 18-ம் தேதியன்று தலைவர்கள் அளித்த வாக்குறுதியின்மீது உபவாசத்தைக் கைவிட்டார்.