பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர் சிந்திய
இரத்தம்


மகாராஜாக்கள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்.
மடாதிபதிகள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்,

மாயா ஜாலம், மகேந்திர ஜாலம் தெரியும் என்று கூறிக் கொண்டவர்கள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்,

ஆரூடம் கணித்து, இனி இன்னின்னபடி ஆகும் என்று கூறும் ஆற்றல் எமக்குண்டு என்று கூறுபவர்கள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்.

யோகம் தெரியும், ஆண்டவனைக்காட்ட எம்மால் முடியும், அகிலமெல்லாம் அடக்கிடும் வித்தை தெரியும் என்று பேசினவர்கள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்.

அவர்கள் இருந்தனர், என்பது மட்டுமல்ல, நிலைமை.--

மகாராஜாக்களுக்கு வரி செலுத்திக்கொண்டு பயபக்தி விசுவாசம் காட்டிக்கொண்டு, மக்கள் இருந்தனர்.