பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

உலகப் பெரியார் காந்தி



1908, ஜன, 30, ஒரு சமரஸம் ஏற்பட்டதால் விடுதலை பெற்றார்.
1908. பிப். 8. ஒரு பட்டாணியன் அவரைக் கொல்ல முயற்சித்தான்.
1908, ஆக. மீண்டும் சாத்வீகப் போராட்டம்.
1908, அக். மீண்டும் சிறைவாசம்.
1909, ஜூன். பிரிட்டிஷ் சர்க்காரிடம் தூது போக இங்கிலாந்து பிரயாணம்.
1911--12, ஒரு வாரம் உண்ணாவிரதம். 4 மாதத்துக்கு தினசரி ஒருவேளை சாப்பாடு; பின்னர் 14 நாள் உண்ணாவீரதம்.
1912, ஐரோப்பிய ஆடைகளைத் துறந்தார். பழவர்க்கங்களை

மட்டும் உண்ண ஆரம்பித்தார்.

1913, 3 பவுன் தலைவரி விதித்ததை எதிர்த்து சத்தியாக் கிரஹம் ஆரம்பித்தார். கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையடைந்தார்.
1913, நவ.9.மீண்டும் கைது செய்யப்பட்டு 9 மாத சிறை

தண்டனையடைந்தார்.

1913, டிச.18. நிபந்தனையின்றி விடுதலையடைந்தார். காந்திஜி -- ஸ்மட்ஸ் உடன்படிக்கை
1914, ஜன.21. காந்தி - ஸ்மட்ஸ். உடன்படிக்கை; சத்தியாக்கிரஹம் நிறுத்தப்பட்டது.
1914, ஜூலை, இங்கிலாந்து பிரயாணம்.