பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்

5


1914, ஆக. உலக யுத்தம் ஆரம்பம்: காந்திஜி லண்டனில் இந்தியர் ஆம்புலன்ஸ் படையைத் திரட்டினார்.
1915, ஜன. இந்தியா திரும்பினார்.
1915, மே, சபர்மதி ஆசிரமம் ஆரம்பித்தார்.
1915, 16, ரயில் வண்டியில் 3-வது வகுப்பில் இந்தியா-பர்மா

சுற்றுப்பிரயாணம்.

1918, ஜன. தீர்வையை ரத்து செய்ய பம்பாயிலுள்ள கெய்ரா

ஜில்லாவில் சத்தியாக்கிரஹம் ஆரம்பம்.

1919, பிப், கிரளலட் சட்டத்தை ரத்து செய்ய சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார்.

சத்தியாக்கிரஹ இயக்கம் ஆரம்பம்

1919, 6. ஆசிய இந்தியா சத்தியாக்கிரஹ இயக்கம் ஆரம்பம்;

நாடெங்கும் ஹர்த்தால்.

1919, ஏப்.8, பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1919, ஏப்.13. அமிருதசரஸில் ஜாலியன்வாலாபாக் கோரவதை.
1919, ஏப்.14. ஜனங்கள் பலாத்காரத்தில் ஈடுபட்டதால் மூன்று நாள் உண்ணாவிரதம்.
1919, ஏப், 18. சத்தியாக்கிரஹ நிறுத்தம்.
1919, செ. 'நவஜீவன்' ஆசிரியரானார் ; அக்டோபரில்

'யங் இந்தியா' ஆசிரியரானார்.

1920, கிலாபத் விஷயமாக வைசிராயிடம் தூது.