பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

உலகப் பெரியார் காந்தி



1920. ஆ. 1. கேஸரி ஹீந்த் மெடல், ஜூலுயுத்த மெடல், போயர் யுத்த மெடல் ஆகியவைகளைத் துறந்தார்.
1920, டிச. அஹிம்சா முறையில் சுயராஜ்யம் பெறுவதென்று

நாகபுரி காங்கிரஸில் ஒரு தீர்மானம் நிறைவேறியது.

1921, ஜூலை,அந்நியத் துணி பகிஷ்காரம்.
1921, டிச.காங்கிரஸ் காந்திஜிக்கு சர்வாதிகாரம் அளித்தது.
1922,, பிப். 1. பர்த்தோலியில் சத்தியாக்கிரஹம் ஆரம்பிக்க போவதாக வைசிராய்க்கு நோட்டீஸ்.
1922, பிப். 6. சௌரி சௌராவில் ஜளங்கள் கொள்ளி, சூறையில் ஈடுபட்டதால் 5-நாள் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சத்தியாக்கிரஹ நோக்கத்தைக் கைவிட்டார்.
1922, மார்ச், 18. ராஜதுரோகமாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு 6-வருஷ சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டார்.
1924, ஜன. 21. அப்பெண்டிஸிடிஸ் ஆபரேஷன் ; பிப், 5

விடுதலையானார்.

21-நாள் உண்ணாவிரதம்

1924, செப். 18, ஹிந்து -- முஸ்லிம் ஒற்றுமைக்கு 21-நாள் உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.
1924, டிச. பெல்காம் காங்கிரசுக்குத் தலைமை வகித்தார்.
1925, செப் அகில இந்திய சர்க்கார் சங்கத்தை ஆரம்பித்தார்.
1925, நவ, ஆசிரமவாசிகள் தவறாக நடந்துகொண்டதால் உண்ணாவிரதம் இருந்தார்.