பக்கம்:உலகு உய்ய.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

என்பது பாடல் பகுதி. ஆனால், நாம் பரிந்துரைப்பதா வது-நாம் இங்கே வேண்டுவதாவது: தமது நன்மைக்காக வும் முயன்று பிறரது நன்மைக்காகவும் முயலுவாராக! - என்பதாகும்.

இந்தப் பாடலின் உட்பொருளை உலகநாடுகள் உட் கொண்டு பரந்த உளப் பான்மையுடன் செயலாற்றினால் மக்களினம், இந்த மண்ணுலக வாழ்வை மாண்புள்ள வாழ்வாக மலரச் செய்து, ஒரே உலக அரசின் கீழ் எளி தாகவும் இனிதாகவும் வாழ்வது உறுதி. வடலூர் இராம லிங்க வள்ளலாரின் அருள் மொழியை ஈண்டு மீண்டும் மீண்டும் ஒலிப்போமாக:

'ஒருமையின் உலகெலாம் ஓங்குக!” 'ஒருமையின் உலகெலாம் ஓங்குக!” 'ஒருமையின் உலகெல்லாம் ஓங்குக!”

ஒர் உலக அரசு வளர்க - வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/301&oldid=544957" இலிருந்து மீள்விக்கப்பட்டது