பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

59


நேரே யோகியின் அறைக்குச் சென்று, எச்சரித்துவிட்டு மடத்தைவிட்டு விலகி விடுவது என்று முடிவு செய்துகொண்டான்.

கோபத்துடன் எழுந்தான். கொத்துச்சாவியை எடுத்தான். பெட்டியைத் திறந்தான். இரண்டு வெள்ளை வேட்டிகளை எடுத்துக்கொண்டான். காவியைக் களைந்து வீசினான். வெள்ளை வேட்டிகளைக் கட்டிக்கொண்டான், உருத்திராட்ச மாலைகளை எடுத்தெறிந்தான்.

நேரே யோகி படுத்துறங்கும் அறைக்குச் சென்றான். கதவு சாத்தப்பட்டிருந்தது, ஆனால் கதவிடுக்கில் வெளிச்சம் தெரிந்தது.

அடிமேல் அடி எடுத்து வைத்து, கதவருகே சென்று உள்ளே நடப்பதை நோக்கினான்.

“யோகி“, மங்கையொருத்தியுடன் சல்லாபித்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.

“கோகிலா! நீ என்னை உதவாக்கரை என்று ஒதுக்கித் தள்ளினாயே. பார் இப்போது!” என்று யோகி கூறிட, “இவ்வளவு சமர்த்து உமக்கு இருப்பதைக் காணவே நான் உம்மை முன்னம் வெறுத்தேன்” என்று கோகிலம் என்று அழைக்கப்பட்ட பெண் கூறினாள்.

பரந்தாமனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கதவைக் காலால் உதைத்து உள்ளே சென்று யோகியின் கன்னத்தில் அறையலாமா என்று தோன்றிற்று. பொறு மனமே பொறு என்று நின்றான்.

“அழகாபுரி உமக்குத் தெரியுமோ” என்றாள் கோகிலம்.

“அங்கே என்ன அதிசயம்” என்றார் யோகி.

“அங்கே ராதா என்றொரு பெண்....” என்று கோகிலம் கூறலானாள்.

தன் காதலி ராதாவின் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் பரந்தாமன் ஜாக்கிரதையாக உள்ளே என்ன