பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101


இது கேட்ட இராமனும் இலட்சுமணனும் பெரு வியப்பு எய்தியவராய் மேலே நடந்தனர். அப்போது அங்கே சோலை ஒன்று தென்பட்டது.

“இதற்குப் பெயர் சித்தாச்ரமம். இங்கேதான் நான் வேள்வி செய்யப் போகிறேன்” என்றார் முனிவர்.

“சித்தாச்ரமம் என்ற பெயர் வரக் காரணம் என்ன?” என்று கேட்டான் இராமன்.

முனிவர் சொன்னார்; “திருமால் இந்த வனத்திலேயிருந்து தவம் செய்தார். காசிப முனிவர் அதிதியுடன் இங்கிருந்து தவம் செய்து சித்தி பெற்றார். ஆதலின் இது சித்தாச்ரமம் என்று பெயர் பெற்றது."

“நானும் இங்கே தவம் செய்து சித்தி பெறுவேன்"

இவ்வாறு கூறிவிட்டு முனிவர் யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தார். வேள்வி தொடங்கினர்.


𝑥𝑥𝑥𝑥

ண்ணுதற்கு ஆக்க அரிது
இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய
முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற
மன்னவன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற
இமையில் காத்தனர்.